பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

பாண்டிமாதேவி / முதல் பாகம்


“மகாமண்டலேசுவரரின் கூர்மையான அறிவு எப்படியெல்லாம் வேலை செய்கிறதென்று நினைத்துப் பார்த்தேன், சிரிப்பு வந்தது.”

“பரவாயில்லை அடிகளே! உங்கள் விருப்பத்தை நான் கெடுக்கக்கூடாது. எழுந்து வாருங்கள். இந்த மாளிகையில் எந்த இடங்களையெல்லாம் காட்டமுடியுமோ அவற்றைக் காட்டுகிறேன்.”

“நீ காட்டாத இடங்களையெல்லாம் நான் என்னுடைய தவ வலிமையைக் கொண்டு ஞான நோக்கத்தால் பார்த்து விட்டால் என்ன செய்வாய்?”

“அப்படி ஞான நோக்கத்தால் பார்க்கிற சாமர்த்தியமுள்ளவர் எல்லா இடங்களையும் இருந்த இடத்திலிருந்தே பார்த்துக்கொள்ளலாமே?” என்று பச்சைக் குழந்தைபோல் கைகொட்டிச் சிரித்து அவரைக் கேலி செய்தாள் மகாமண்டலேசுவரரின் புதல்வி.

“நீ பெரிய குறும்புக்காரப் பெண்! உன் தந்தையின் சூழ்ச்சி, சாதுரியம் ஆகியவற்றில் முக்கால் பங்கு உனக்கு வந்திருக்கிறது” என்று சிரிப்புக்கிடையே கூறிக்கொண்டே சுற்றிப் பார்ப்பதற்காக எழுந்திருந்தார் துறவி.

குழல்மொழி அவரை அழைத்துக்கொண்டு அவருக்கு முன் நடந்தாள்.

“அடிகளே! துறவிகளுக்கு முக்காலமும் உணரும் திறன் உண்டென்று கேள்விப்பட்டிருக்கிறேன். இத் தென் பாண்டி நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய சில முக்கியமான செய்திகளைப் பற்றி நான் உங்களிடம் ஆருடம் கேட்கப் போகிறேன்.”

“ஆகா! தாராளமாகச் சொல்கிறேன். எதிர்காலம் ஒளி நிறைந்ததாக இருக்கப்போகிறது. வெற்றிகளும் செல்வங்களும் விளையப்போகின்றன. மாதந் தவறாமல் மூன்று மழை பொழியப் போகிறது....”

“போதும்! போதும்! நிறுத்திக் கொள்ளுங்கள். உலகத்தில் முதல் சோதிடன் பிறந்ததிலிருந்து இன்றுவரை பொதுவாக