பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

349


நினைக்கவேண்டும். அல்லது தீந்தமிழ் இசையைக் கேட்க வேண்டும். கோட்டாற்றுப் பண்டிதர் வந்து கவலைக்கு மருந்தளித்துப் பேசிக் கொண்டிருந்தார். அவரும் போய்விட்டார். உன்னுடைய வாயால் பாடிக் கேட்க வேண்டுமென்பதற்காகவே அவரிடம் இந்தப் பாட்டை நான் எழுதி வாங்கிக்கொண்டேன்’ பகவதியின் கையில் அந்த ஒலையைக் கொடுத்தார் மகாராணி. ஒருதரம் வாய்க்குள் முணுமுணுத்தாற்போல் பாடிப்பார்த்துக் கொண்டு அதற்கு பண் நிர்ணயம் செய்யச் சில கணங்கள் பிடித்தன அவளுக்கு. ...

“தேவி! இந்தப் பாடலைப் பழம்பஞ்சுரப் பண்ணிலும் பாடலாம், இந்தளப் பண்ணிலும் பாடலாம்.” * ...

“இரண்டிலுமே தனித்தனியாகப் பாடிக்காட்டேன். கேட்கலாம்!” மகாராணியிடமிருந்து ஆணை பிறந்தது. -

மோனத்தைக் கிழித்துக்கொண்டு பழம்பஞ்சுரம் எழுந்தது. பின்பு இந்தளம் இனிமை பரப்பியது. பகவதியே வீணையும் வாசித்துக்கொண்டாள். பொல பொலவென்று பூக்குவியலை அள்ளிச் சொரிவதுபோல் ஒரு மென்மையை எங்கும் இழையவிட்டது அவள் குரல். செவிவழிப் புகுந்து பாய்ந்த அந்த இனிமையில் தன்னை மறந்து இலயித்துப் போய்ச் சிலையாய் வீற்றிருந்த மகாராணிக்குச் சுயநினைவு வந்தது. பகவதி பாடல் ஒலையைத் திருப்பி அளித்தாள்!

“குழந்தைகளே! நம்முடைய தமிழ் மொழிக்கு எவ்வளவு ஆற்றல் இருக்கிறது பார்த்தீர்களா? பேசினால் ஒருவகை இனிமை. பாடினால் ஒருவகை இனிமை, எழுதினால் ஒருவகை இனிமை. இறைவன் தந்த மொழிக்குள் எத்தனை கோடி இன்பங்களை வைத்திருக்கிறான்!” என்று மகாராணி வியந்து கூறினார். . . . . . .

பாடற் பண்களின் பெயர்களைப் பற்றிய அராய்ச்சி நாட்டியத்தில் மெய்பாடு வகைகள், இவ்வாறு எதை எதையோ பற்றி மகாராணியோடு சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்து விட்டு விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டனர் அந்தப் பெண்கள் இருவரும். போகும்போது விலாசினி மறுபடியும் பகவதியின் வாயைக் கிண்டினாள். “இப்போது நீயே சொல்!