பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

387


விட்டு விடுவேன்’ என்று அடம் பிடிக்கிறாள். அவளுக்கு ஒரே மகன் அவன். தந்தைக்கு நியாயம் பெரிதாகத் தெரிகிறது! தாய்க்குப் பாசம் பெரிதாகத் தெரிகிறது. தாய் ஈரைந்து திங்கள் வயிற்றில் சுமந்தவள், என்னசெய்வது, தேவி, தாயாக இருந்தால்தான் மகனை உணர முடிகிறது. அடியானாக இருந்தால்தான் தெய்வத்தை உணர முடிகிறது. ஆண்டவனாக இருந்தால்தான் அடியானின் வேதனை தெரிகிறது. வாழ்க்கை நியதி எப்படி அமைந்து கிடக்கிறது.” -

அர்ச்சகர் உணர்ச்சிகரமாக, உருக்கமாகத் தம் மனத்தில் புதைந்து கிடந்த துன்பங்களை மகாராணிக்கு முன் கொட்டினார். அவர் முடித்ததும் மகாராணி ஆவலோடு கேட்டார்:- “ அதெல்லாம் சரி! முடிவு என்ன ஆயிற்று? “கைமுக்குத் தண்டனை'யை நின்றவேற்றினார்களா, இல்லையா?” . . .

“நீதி மன்றத்தார் தண்டனையை அளித்துவிட்டார்கள். ஆனால் தண்டனையை நிறைவேற்ற முடியாமல் ஒரு தாயின் இரண்டு கைகள் தடுத்து அடம் பிடிக்கின்றன. நெய்க்கொப்பரை கொதித்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவு கூட்டமும் அதைதான் வேடிக்கை பார்க்க போகிறது. முடிவு என்ன ஆகுமோ தெரியவில்லை.” -

அர்ச்சகருடைய வார்த்தைகளைக் கேட்டு முடிந்ததும், மகாராணி வானவன்மாதேவியார் பெருமூச்சுவிட்டார். அவருடைய பேச்சு மகாராணியின் மனத்தில் இரண்டொரு சொற்களை ஆழப் பதித்துவிட்டது.

“தாயாக இருந்தால்தான் மகனை உணர முடிகிறது. ஆண்டவனாக இருந்தால்தான் அடியானின் வேதனை தெரிகிறது.” . - .

யாரும் அறியாமல் புதையல் எடுத்த எளியவன் அதனைத் திரும்பத்திரும்பத் தனிமையில் தான் மட்டும் பார்த்து மகிழ்வதுபோல் இந்த உயிரோட்டமுள்ள வாக்கியங்கள் அவர் மன ஆழத்தைத் தொட்டுத் துடிப்பு

ஊடடின. - -