பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


செய்திகளை இங்கே எனக்குத் தெரியுமாறு அனுப்பவேண்டும். இந்தக் காரியங்களை யெல்லாம் நன்றாகச் செய்து உயிர் தப்புவதற்கு உங்களுக்கு என்னென்ன திறமைகள் வேண்டுமென்று தெரியுமா? முதலாவதாகப் பொய்களை உண்மைகள்போல் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். சமயத்துக்கு ஏற்றாற்போல் வேடமிட்டு நடிப்பதற்குத் தெரிந்திருக்க வேண்டும். மிகமுக்கியமான மூன்றாவது திறமை உயிர், உடல், பொருள் எதையும், எந்த விநாடியும் இழக்கத் தயாராகயிருக்க வேண்டும். அவ்வளவுதான்! இறுதியாக உங்களுக்கு நான் கூறும் எச்சரிக்கை ஒன்று உண்டு. இங்கிருந்து இந்தக் காரியத்தைச் செய்வதற்காக இன்று நீங்கள் புறப்பட்டுச் செல்வது கூடியவரையில் பரம இரகசியமாகவே இருக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் புறப்பட்டுச் செல்வதற்கு முன் கடைசியாக மிக வேடிக்கையான முறையில் உங்கள் திறமையைப் பரீட்சை செய்து பார்க்கப் போகிறேன்” என்று சொல்லிவிட்டுக் குறும்பாகச் சிரித்தார்.

“அந்தச் சோதனை யாதோ? சீவல்லபமாறன் விநயமாகக் கேட்டான். - . -

“உங்களில் யாருக்கு அதிகப் பொய் கூறும் திறமை இருக்கிறதென்று பரீட்சை செய்யப்போகிறேன்.”

அவருடைய இந்தச் சொற்களைக் கேட்டு எல்லோரும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டனர். -

“சுவாமி! மெய்க்காவற் படை வீரர்களிடம் பொய் சொல்லும் திறமையை எதிர்பார்த்தால் தங்களுக்குப் பெருத்த ஏமாற்றம்தான் கிட்டும்!” - ..”, “ “ . . . . . .

“பரவாயில்லை, சீவல்லபா உலகத்தில் பொய் சொல்லத் தெரியாத ஆட்களே கிடையாது. நன்றாகப் பொய் கூறத் தெரிந்த கூட்டத்தில் இருந்துதான் கவிகள், கதாசிரியர்கள், பெளராணிகர்களெல்லாம் உருவாகிறார்கள். எங்கே, பார்க்கலாம்? முதலில் உன் திறமையைக் காண்கிறேன். அழகாக ஒரு பொய் சொல்.” • . . “ ..