பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


இதில் நான் செய்யப்போகிற ஏற்பாடுகளிலும் அடங்கியிருக்கின்றன. ஆனால் தம்முடைய மூளையிலும் சிந்தனைகளிலும் அடங்கியிருப்பதாக மகாமண்டலேசுவரர் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று அதைக் காணும்போது ஒரு நினைவு அவன் மனத்தில் உண்டாயிற்று. மகாமண்டலேசுவரர் இல்லாத இடத்தில் அவரைப்பற்றி அசூயையும், காழ்ப்பும், காய்ச்சலும் தன் மனத்தில் உண்டாவதை அவனால் தடுக்க முடியவில்லை. ஆனால் அவரை நேரில் பார்த்துவிட்டாலோ பயம், அடக்கம், பணிவு எல்லாம் அவனையும்.மீறி அவனிடத்தில் வந்து பொருந்திக் கொண்டுவிடுகின்றன. துணிந்து ஓரிரு முறை அவரை எதிர்த்துப் பேசியிருக்கிறானென்றாலும் அவ்வாறு பேசி முடிந்தபின் ‘ஏன் பேசினோம் என்று தன்னை நொந்து கொண்டிருக்கிறான். ஆழமும் அழுத்தமும் நிறைந்த அவருடைய கண்களின் முன் அவன் தனக்குத் தானே சிறு பிள்ளையாய்ப் போய்விடுவான். அவருடைய பார்வைக்கு முன்னால் அவனுக்கு உண்டாகிற தாழ்வு மனப்பான்மையை அவன் தவிர்க்க முடிவதில்லை. கணவனின் முகத்தைக் காணாதபோது ஏற்பட்ட ஊடல் அவனைப் பார்த்து விட்டதுமே மறைந்துவிடும் பலவீனமான பெண் மனநிலையைத்தான் அவனுக்கு உவமை கூறவேண்டும்.

அவருடைய கட்டளைக் குத்தான் அவன் கீழ்ப்பணிந்தான். அவன் என்ன? மகாராணியே அப்படித் தானே? ஆன்ால் எவருடைய கண்களுக்கு முன்னால் அவன் தலைகுனிவானோ, எவருடைய கட்டளை அவனை ஆளுமோ, எவருடைய அறிவு அவனை மலைக்க வைத்ததோ, அவர் மேலேயே அவன் சந்தேகப்பட்டான். பொறாமை கொண்டான். பிறருக்குத் தெரியாமல் அவர் நடவடிக்கை களை நேரிலும், தன்னைச் சார்ந்தவர்களைக் கொண்டும் இடைவிடாமல் கண்காணித்தான்.

பெரிய அரசன் அரண்மனையின் ஒரு மூலையில் தூங்கிக் கொண்டிருந்தாலும் அவனுடைய ஆற்றலின்