பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

469

“அண்ணா! உங்கள் பெண்ணுக்கு நீங்கள்தான் சொல்ல வேண்டும். அவளுடைய நினைவுகளும், கனவுகளும் இப்போது இந்தத் தீவிலேயே இல்லை. முன்னைப்போல் சிரிக்காமல், பேசாமல், கலகலப்பாக இராமல் எப்போதும் அவனையே நினைத்துப் புழுங்கிக் கொண்டிருக்கிறாள். கடற்கரைக் கன்னிமார் கோயிலுக்குப் போவதற்காகப் பூத்தொடுக்கச் சொன்னேன். தொடுப்பதற்காக உட்கார்ந்தவள் சுய நினைவே இல்லாமல், பூவை மறந்து வெறும் நாரை முடிந்து கொண்டிருக்கிறாள். இப்படியெல்லாம் இருக்காதே. அவனை மறந்துவிட்டு முன்போல் இரு’ என்று கண்டித்தேன். அதற்குத்தான் இந்தப் பலமான அழுகை!”

தன் தங்கை கூறியதைக் கேட்டு மதிவதனியின் தந்தை சிரித்தார். “இந்த மாதிரி வயதுப்பெண்களை இத்தகைய அநுபவங்களிலிருந்து கண்டித்துமட்டும் திருத்திவிட முடியாது. தன்னை நினைக்காதவனைத் தான் நினைத்து ஏமாந்த பெண்களின் கதைகள் உலகத்தில் அதிகமாக இருக்கின்றன. அந்தக் கதைகளில் ஒன்றாக என் அருமைப் பெண்ணின் நினைவுகளும் ஆகிவிடக்கூடாதே என்பது தான் என்னுடைய கவலை. நினைப்பதை அடைவது ஒரு தவம்; ஒரு புனிதமான வேள்வி அது. நினைத்து நினைத்து அந்த நினைவுகளை உருவேற்றி வலுவேற்றி, எண்ணியதை அடைந்தே தீரும் ஆசைத் தவத்துக்குப் பிடிவாதம் நிறைய வேண்டும். அந்த அன்புமயமான தவத்தை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு செய்து வெல்லும் தெம்பு இதிகாச காலத்துப் பெண்களுக்கு இருந்தது. சீதைக்கும், பாஞ்சாலிக்கும், ஓரளவு சகுந்தலைக்கும் இருந்த அந்தத் தெம்பு செம்பவழத் தீவின் ஏழைப் பரதவனான என்னுடைய மகளுக்கு இருந்தால் அவளுடைய நல்வினைதான் அது. சீதையும் பாஞ்சாலியும் சகுந்தலையும் நினைத்தவர்களை அடைய மட்டும்தான் முடிந்தது. சாவித் திரியோ அவர்களினும் ஒருபடி மேலே போய்விட்டாள். தான் அடைந்த ஆடவனைத் தன் நினைவுத் தவத்தால் கூற்றுவனிடமிருந்தே மீட்க முடிந்தது அவளால் தெய்வீகக் காதலின் வெற்றிக்கு இத்தகைய நினைவு வன்மை