பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


உண்டாயிற்று. தற்செயலாகச் செலுத்திக்கொண்டு போகிறவளைப்போல் அந்தக் கப்பலுக்கு அருகில் தன் தோணியைச் செலுத்திக்கொண்டு போனாள் மதிவதனி,

முன் குடுமியும், பருத்த உடம்பும், குட்டைத் தோற்றமுமாக ஓர் ஆள் அந்தக் கப்பலின் தளத்தில் நின்றுகொண்டிருப்பதை மதிவதனி தோணியில் நின்று பார்த்தாள். அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கப்பலின் தளத்தில் அரசகுமாரி போன்ற அலங்காரத்தோடு அழகிய இளம் பெண் ஒருத்தியும், பெண்மைச் சாயல்கொண்ட முகமுடைய இளைஞன் ஒருவனும் வந்து அந்த முன் குடுமிக்காரருக்குப் பக்கத்தில் நின்றார்கள். மதிவதனி கடலில் துணிவாகத் தோணி செலுத்திக்கொண்டு வரும் காட்சியை ஏதோ பெரிய வேடிக்கையாக எண்ணிப் பார்க்கிறவர்களைப்போல் அந்த மூன்றுபேரும் கப்பல் தளத்தில் நின்று பார்த்தார்கள்.

முன்குடுமிக்காரர் அவளை நோக்கிக் கைதட்டிக் கூப்பிட்டு ஏதோ விசாரித்தார். கடல் அலைகளின் ஒசையில் அவர் விசாரித்தது மதிவதனியின் செவிகளில் விழவில்லை. தோணியை இன்னும் பக்கத்தில் கொண்டுபோய் நிறுத்திக் கொண்டு, “ஐயா! என்ன கேட்டீர்கள்? காதில் விழவில்லை” என்று அண்ணாந்து நோக்கி வினவினாள் அவள்.

“தோனிக்காரப் பெண்ணே! இதோ அருகில் தெரியும் இந்தத் தீவுக்குப் பெயர் என்ன கப்பலோடு இரவில் தங்குவதற்கு இங்கே வசதி உண்டா?” என்று முன்குடு மிக்காரர். அவளிடம் இரைந்து கேட்டார்.

“ஆகா! தாராளமாகத் தங்கிவிட்டுப் போகலாம். இந்தத் தீவுக்குப் பெயர் செம்பவழத் தீவு! பார்த்தாலே உங்களுக்குத் தெரியுமே!” என்று மதிவதனி பதில் சொன்னாள். அந்தக் குட்டையான முன்குடுமிக்காரரைப் பார்க்கப் பார்க்க வேடிக்கையாக இருந்தது அவளுக்கு .

“கூத்தா இடையாற்றுமங்கலத்தில் எங்கள் மாளிகைக்கும் அக்கரைக்கும் இடையிலுள்ள பறளியாற்றைப் படகில்