பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

539


“சுவாமி! ஆயுதங்களைத் திருடிக்கொண்டு போக வந்தவர்கள் மிகவும் சாமர்த்தியமுள்ளவர்களாக இருக்க வேண்டும். தங்களை இனம் தெரிந்து கொள்ளுவதற்கேற்ற எந்த அடையாளங்களையும் அவர்கள் விட்டுச் செல்லவில்லை. வந்தவர்களில் யாரோ ஒருவர் இடுப்புக்கச்சையாக அணிந்த வெண்பட்டுத் துணி ஒன்று மட்டும் நீரிலும், சேற்றிலும் நனைந்து விருந்து மாளிகைப் பின்புறமுள்ள பறளியாற்றுப் படித்துறையில் கிடைத்தது. அதை அடையாளமாக வைத்துக்கொண்டு எதையும் கண்டுபிடிக்க முடியுமென்று தோன்றவில்லை.”

மகாமண்டலேசுவரர் மெல்லச் சிரித்தார். “வேளான் ! அந்த வெண்பட்டுத் துணியை இப்போது இங்கே கொண்டு வந்திருக்கிறாயா?” என்று அவர் கேட்டவுடன் வேளான் தன் அங்கியில் மறைத்து வைத்துக்கொண்டிருந்த அந்த வெண்பட்டுத் துணியை எடுத்து அடக்கவொடுக்கமாக அளித்தான். அவர் அதை விரித்துப் பார்க்க முயன்றார். ஆற்று நீரோடு செம்மண் சேறும் படிந்து உலர்ந்து போயிருந்ததால் அதில் ஒன்றுமே தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. -

“சிறிது நேரம் நீ இங்கேயே காத்துக் கொண்டிரு” என்று வேளானிடம் கூறிவிட்டு, அந்தப் பட்டுத்துணியுடன் உள்ளே சென்றார் அவர். வேளான் வியப்பும் பயமும் போட்டியிடும் மன உணர்ச்சியோடு அங்கேயே காத்திருந்தான்.

அரை நாழிகைக்குப் பின் மகாமண்டேலசுவரர் மறுபடியும் சிரித்துக்கொண்டே அவன் முன் தோன்றினார்.

‘வேளான் ! யார், எவருடைய துண்டுதலால் ஆயுதங்களைத் திருடுவதற்கு வந்தார்கள் என்ற விவரம் எனக்குத் தெரிந்துவிட்டது. இதில் கவலைப்படுவதற்கோ, பயப்படுவதற்கோ ஒன்றுமே இல்லை. நீ உடனே இடையாற்று மங்கலத்துக்குத் திரும்பிப்போய் நான் சொல்கிறபடி செய். பறளியாற்றில் எந்த இடத்தில் படகு கவிழ்க்கப்பட்டதோ, அங்கே ஆட்களை மூழ்கச் செய்து ஆயுதங்களைக் கிடைத்த வரையில் வெளியே எடுத்துவிடவேண்டும். ஆற்றின்