பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


படையும் சேர்ந்தால் நாம் பெருகிவிடுகிறோம். அரசூருடையானும் பரதுாருடையானும் படைத் தலைமை பூண்டு அருமையாகப் போர் புரிவதில் இணையற்றவர்கள். தென்பாண்டி நாட்டாருக்கு எவ்வளவுதான் படையுதவி கிடைக்கட்டுமே! நமக்கென்ன கவலை? நம்முடைய படைக் கூட்டுறவின் முன் அவர்கள் என்ன செய்ய முடியும்? மேலும் தென் பாண்டி நாட்டிலிருந்து நமக்குக் கிடைக்கும் செய்திகளால் அங்கும் நிலைமை அவ்வளவு தெளிவாக இருப்பதாகத் தெரியவில்லையே? இடையாற்றுமங்கலம் மகாமண்டலேசுவரர் மாளிகையிலிருந்த பாண்டிய மரபின் அரசுரிமைச் சின்னங்கள் கொள்ளை போய்விட்டதாக நேற்று கொற்றவைக் கூத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது கொடும்பாளுரார் வந்து ஒரு செய்தி சொன்னார். நேற்றைக்குப் பிடிபட்ட அந்த ஒற்றனிடமிருந்து எவ்வளவோ இரகசியங்களைத் தெரிந்து கொள்ளலாமென்று நினைத் திருந்தேன். அவனோ கழுமரத்தில் உயிரைப் பலி கொடுக்கிறவரை ஒரு வார்த்தைகூட நமக்குச் சொல்ல வில்லை. இராசசிம்மன் இலங்கையிலும், தாய்வழி மூலம் சேரர்களிடமும், படை உதவி பெறலாமென்று நம் காதில் செய்திகள் விழுகின்றன. அது எப்படியானாலும் நம்முடைய படையெடுப்பை நாம் உறுதி செய்துகொண்டுவிட வேண்டியதுதான். உங்கள் கருத்துக்களையும் மனம் விட்டுச் சொல்லிவிடுங்கள்.” r х

சோழன் முகத்தையே பார்த்தவாறு பேச்சை உற்றுக் கேட்டுக்கொண்டிருந்த நால்வரும் பேச்சு நின்றதும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“நேற்று நடந்த சம்பவத்திலிருந்து நம்முடைய ஆட்சிக் குட்பட்ட பகுதிகளிலும் பாண்டி நாட்டு ஒற்றர்கள் போதுமான அளவு நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றே என்னால் அதுமானிக்க முடிகிறது” என்றான் கண்டன்