பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/583

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

581


அவர்களிருவரும் நின்றுகொண்டிருந்த இடத்துக்கு மிக அருகில் வந்துவிட்டனர். சாலையில் நெடுந்துாரத்துக்குத் தெரிந்த பிட்சுக்களின் வரிசையைப் பார்த்தபோது ஆயிரம் பேருக்குக் குறையாமல் இருக்கும்போல் தோன்றியது.

“இளவரசே! இவர்கள் எல்லோரும் விசிதபுரத்து மகாபெளத்த சங்கத்தைச் சேர்ந்த பிட்சுக்கள். இதோ, கூட்டத்தில் எல்லோருக்கும் முன்னால் கையில் சுவடியோடு நடந்து வருகிறாரே, இவர்தான் மகாபெளத்த சங்கத்தின் தலைவர் தத்துவசேன அடிகள். வாருங்கள். உங்களை அவருக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்’ என்று குமாரபாண்டியனின் கையைப் பற்றி அழைத்துக்கொண்டு பிட்சுக்களின் கூட்டத்துக்கு முன்னால் சென்றார் சக்கசேனாபதி. r * . . . . -

மரத்தடி இருட்டிலிருந்து யாரோ இருவர் வேகமாகத் தங்களை நோக்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும், சாலையில் முன்னேறிக் கொண்டிருந்த பிட்சுக்களின் கூட்டம் தயங்கி நின்றது. சக்கசேனாபதியும், குமாரபாண்டியனும் தத்துவசேன அடிகளுக்கு முன்னால் போய் வணங்கி நின்றார்கள்.

“நான் என் கண்களுக்கு முன்னால் காண்பது உண்மை தானா? விடிந்தால் அரசருடைய நாண்மங்கல விழாவுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டிய ஈழநாட்டுப் படைத் தலைவர் காட்டில் காட்சியளிக்கிறாரே ?’ என்று கலகலவென்று சிரித்தவாறே சக்கசேனாபதியை நோக்கிக் கேட்டார் பிட்சுக்களின் தலைவரான தத்துவசேன அடிகள். “அடிகளே! கடந்த சிலநாட்களாகத் தென்பாண்டி நாட்டில் சுற்றிக்கொண்டு இருந்துவிட்டு இன்றுதான் இலங்கை மண்ணிலேயே கால் வைத்தேன். இதோ என் அருகே நிற்கும் இளைஞர் குமாரபாண்டியர் இராசசிம்மன் ஆவார்” என்று தொடங்கி, காட்டில் வந்துகொண்டிருக்கும்போது யானைகள் குறுக்கிட்டதால் தங்களுக்கு ஏற்பட்ட துன்பம் முதலான வற்றையும் கூறினார் சக்கசேனாபதி. குமாரபாண்டியனை