பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/623

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 82?

முடியும். இந்தப் பெண்ணை அடையாளம் சொல்லி, ‘இவள் எப்போது, யாருடன் எந்தக் கப்பலில் வந்து இறங்கினாள் என்று கப்பல்துறை ஊழியர்களிடம் விசாரிப்போம். அந்த விசாரிப்புக்குக்கூட அவசியமில்லை. ஏனென்றால் இவள் பகவதியாயிருந்து கப்பலில் தென்பாண்டி நாட்டிலிருந்து வந்திருந்தால் தமனன் தோட்டத்துத்துறையிலேயே கப்பலை விட்டுக் கீழிறங்க முடியாமல் நம் வீரர்கள் சிறைப்பிடித்து நிறுத்தியிருப்பார்கள். நான்தான் கப்பலைத் தடுத்து நிறுத்தும்படி கண்டிப்பான கட்டளையிட்டு வந்திருக்கிறேனே. நேற்றைக்கு முன்தினம் இரவு தமனன் தோட்டத்திலிருந்து எனக்கு வந்த தகவலிலிருந்து ஒரே ஒரு கப்பல்தான் பிடிபட்டிருப்பதாகத் தெரிகிறது. அந்தக் கப்பலில் வந்திருந்தால் இந்தப் பெண்ணை இறங்கிவர விட்டிருக்கமாட்டார்களே?” என்று சக்கசேனாபதி விளக்கமாகச் சொன்னபோது, அவர் சொல்கிறபடியே இருக்கலாமென்று இராசசிம்மனுக்கும் தோன்றியது.

“ஒரே மாதிரி முக அமைப்பும், தோற்றமும் உள்ள பெண்கள் வேறு இடங்களில் இருக்க முடியும். இறந்து கிடக்கும் பெண் பகவதியைப் போன்ற தோற்றமுடைய வேறொருத்தியாகவும் இருக்கலாம்” என்று நினைத்து மன அமைதி அடைய முயன்றான். மனத்தின் வேதனையும், குழப்பமும் பிடிவாதமாகத் தணிவதற்கு மறுத்தன. சலனமில்லாத முகபாவத்தோடு நின்று கொண்டிருந்தவர்.புத்த பிட்சு ஒருவர்தான். நன்றாகப் பழுத்த பழங்களெல்லாம் உதிராமல் இருக்கும்போது காற்றின் கொடுமையால் பிஞ்சுகளும், காய்களும் மரத்திலிருந்து உதிர்ந்து விடுவதுண்டு. தோல் சுருங்கி நரை திரை முப்பு கண்டவர்களுக்கெல்லாம் வராத சாவு இளைஞர்களுக்கு வந்துவிடுகிறது. அவரவர்களுக்கென்று அளந்து வகுத்த நாட்களுக்குமேல் யாரும் வாழப்போவதில்லை” என்று உலக நியாயங்களை எண்ணிப் பார்த்துக் கலக்கத்தைத் தவிர்த்தவர் அவர் ஒருவர்தாம்.

“இந்தச் சோக முடிவை எண்ணிக் கலங்கி இப்படியே நின்று கொண்டிருந்தால் செயலும், பயனும் நிறைந்த நம் நேரம் கடந்து போய்விடும். நாம் தமனன் தோட்டம் போக