பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/722

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

720

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


“நீங்கள் சொல்லாவிட்டாலும் நானாகச் சிலவற்றைப் புரிந்துகொண்டேன். இளவரசே! மகாமண்டலேசுவரருக்கும் தளபதிக்கும் உள்ளுறப் பெரிய பகைமை ஏதோ இருக்கவேண்டும். தளபதி இந்தப் போரில் கலந்துகொள்ள முடியாமற் போன தற்குக் கூட மகாமண்டலேசுவரர் காரணமாயிருக்கலாம். அதனால்தான் இந்தக் கலகமே மூண்டிருக்கிறதென்று எனக்குத் தோன்றுகிறது.”

“சக்கசேனாபதி ! உங்களுக்குத் தெரிந்தது சிறுபகுதிதான், ஆனால் அவை சரியான அனுமானங்களே! அதற்கு மேற்பட்டவற்றைத் தெரிவிக்க ஆவல் இருந்தும் ஒருவருக்கு வாக்குக்கொடுத்துவிட்ட காரணத்தால் இயலாத நிலையில் இருக்கிறேன்.” - “வேண்டாம்! அவற்றைத் தெரிந்துகொள்ளும் அவசியம் எனக்கும் இப்போது இல்லை. ஆனால் இந்தக் கலகத்தைத் தடுக்க உடனே ஏற்பாடு செய்யுங்கள். தளபதி எங்கேயிருந்தாலும் சமாதானப்படுத்திப் போர்க்களத்துக்கு வரவழைக்கச் செய்யுங்கள்.”

“நான் மகாமண்டலேசுவரருக்கும் என் அன்னைக்கும் இங்குள்ள நிலைமையை விவரித்து உடனே திருமுகங்கள் எழுதுகிறேன்.” * , - “சொல்லிக்கொண்டே நிற்காதீர்கள். இளவரசே! உடனே உங்கள் பாசறையில் போய் அமர்ந்து எழுதத் தொடங்குங்கள். நான் இங்கே சிறிது நேரம் இருந்து கவனித்துவிட்டு வருகிறேன்” என்று சொல்லி குமாரபாண்டியனைப் பாசறைக்கு அனுப்பி விட்டுத் தாம் மட்டும் தனியே இருளில் நடந்தார் சக்கசேனாபதி. கலகத்தின் காரணம் பற்றிக் குமாரபாண்டியர் தம்மிடம் கூறாமல் மறைக்கும் மர்மச் செய்திகள் எவையோ அவற்றைத் தெரிந்துகொண்டு விடவேண்டுமென்று கிளம்பிவிட எண்ணினார். தமது தோற்றத்தைத் தென்பாண்டி நாட்டின் சாதாரணமான ஒரு படைவீரனின் தோற்றம் போல எளிமையாக்கிக் கொண்டு பாசறைகளைப் புறக்கணித்துக் கலகக்காரர்களோடு ஓடிப்போன பாண்டியப் படையைப் பின்பற்றி அவரும் சென்றார். தாமும் அவர்களில் ஒருவனைப் போலக் கலந்துகொண்டு அவர்களோடு பேச்சுக் கொடுத்துப்