பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/735

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

733


அவனுக்குப் பதில் சொல்வதற்காக மகாராணி வாயைத் திறந்தார். அவர் பேசத் தொடங்குமுன் அரண்மனை வாயிலில் ‘விடாதே! பிடி! கொல்லு’ என்ற வெறிக் குரல்களோடு பலர் ஓடிவரும் ஓசையும் “ஐயோ! காப்பாற்றுங்கள்” என்று ஒர் ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்து ஒலமிட்டு அபயம் கோரும் அடைக்கலக் குரலும் எழுந்தன. அதைக் கேட்டு யாவரும் திடுக்கிட்டுத் திகைத்தனர். “இராசசிம்மா! ஒடு; அது என்னவென்று போய்ப் பார்” என்று மகனைத் துரத்தினார் மகாராணி, இராசசிம்மன் உட்பட எல்லோருமே அந்தக் குழப்பம் என்னவென்று பார்ப்பதற்காக எழுந்து வாசற்புறம் ஓடினார்கள். மகாராணி, விலாசினி, புவனமோகினி ஆகிய பெண்கள் மட்டும் போகவில்லை. -

அரண்மனையில் பராந்தகப் பெருவாயிலில் மூடு பல்லக்கு ஒன்று கொண்டுவந்து இறக்கி வைக்கப்பட்டிருந்தது. பின்னால் - உருவிய வாள்களும், வேல்களுமாக, யாரோ சில முரட்டு மனிதர்கள் துரத்தி ஓடிவந்துகொண்டிருந்தார்கள். மூடு பல்லக்கு அருகிலிருந்து குழல்வாய்மொழியும், நாராயணன் சேந்தனும் அபயக் குரல் கொடுத்து அலறியவாறு உள்ளே ஓடிவந்து கொண்டிருந்தார்கள். என்ன கூப்பாடு என்று பார்ப்பதற்காக வெளியே வந்த குமாரபாண்டியனும் மற்றவர்களும் இந்தக் காட்சியைக் கண்டு திகைப்பும் வியப்பும் அடைந்து ம்ருண்டுபோய் நின்றனர். இன்னதென்று விளங்கிக் கொள்ள முடியவில்லை. - - - பின்னால் துரத்திவந்த கூட்டம் கணத்துக்குக் கணம் அதிகமாயிற்று. ஆயுதபாணிகளாகத் தாக்குவதற்கு ஒடி வருவதுபோல் வந்த அவர்களுடைய வெறித்தனமும் கூப்பாடுகளும் பெருகின. உள்ளே உட்கார்ந்திருந்த மகாராணி முதலியவர்களும் ஆவலை அடக்கமுடியாமல் பார்ப்பதற்காக எழுந்து ஓடிவந்து விட்டார்கள். காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று அலறிக் கொண்டே ஓடிவந்த குழல்வாய்மொழியும், சேந்தனும் மகாராணியின் காலடியில் விழுந்து வணங்கினார்கள். அவர்கள் இருவரும் பயந்து நடுங்கி முகத்தில்