பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன் பல்யாகசாலை...பெருவழுதி

39

பெரியார் பலர்பலர் பொருளுரை செவிக்கொளப்
பட்டிமண் டபத்துப் பாங்குற வடைந்தருள்
பல்யாக சாலைப் பாண்டிய மன்னன்
முதுகுடுமிப் பெருவழுதி முறைசேயூஉப் புரக்கும்
பழந்தமிழ் நாடும் பாரத தேயமும்
அறமும் அன்பும் அருளும் மெய்ம்மையும்
நாற்பெருஞ் செல்வமா நயமுறப் பெற்று
நல்லோர் உறையுளாய் நாடா வளத்தவாய்

வாழிய வாழிய வாழிய வூழியே.

இதனுடன் அன்று பட்டி மண்டபத்தில் நிகழ்ந்த மதவாத சபை நிறைவேறியது. அரசரும் பிறரும் தத்தமக்குரிய வாகனங்களில் இவர்ந்து தத்தம் இருக்கைகள் எய்தினர்.