இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
74
டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா
பிறகு, இடுப்புக்குக் கீழே கைகளை விட்டு, இடுப்பு எலும்புகளை மெதுவாகப் பற்றி, உடலை 4 லிருந்து 6 அல்லது 7 அங்குல உயரம் மேலே உயர்த்தவும். இந்த அசைவானது, அவரது மார்புப் பகுதியை விரிக்கவும், புதுக் காற்று உள்ளே புகவும் உதவும்.
இது போன்ற முதலுதவி முறைகளைச் செய்வது மட்டும் போதும் என்று நிறுத்தி விடாமல், மருத்து வருக்கும் சேதி அனுப்பி விடவும். அவர் வர முடிந்தால் இல்லையேல், மூழ்கியவரைக் கொண்டு செல்ல முடிந்தால் இரண்டில் எது எளிதோ, அதை விரைந்து செய்ய வேண்டும்.
பாதுகாப்பு முறையில் காலத்திற்குள் செய்வதுதான் முக்கியம். நேரம் போக்குவது என்பது பாதுகாப்பிலிருந்து வெகுதூரம் ஒதுக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதே அர்த்தமாகும்.
ஆகவே, விரைந்து உதவி செய்வதை கொள்கையாகவே கொள்ள வேண்டும்.