பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$3፩ பாரதிக்குப் பின் விசைப்படகுபோல், வேகவேகமாகக்கண்கள் சுழல,கட்டு மரம்போல் கால்கள் மரத்துப் போய் நடக்க நாலடி நீளமுள்ள மாவலரசி என்னும் மீனை அமுக்க முடியாமல் அமுக்கி வைத்திருக்கும் நயிலான் வேைபால்,கொண்டையை அடக்க முடியாமல் அடக்கிய வல் ஜொலிக்கும்படி மல்லிகைப்பூ பந்தலிட விருல் மீனின் வாளிப்போடு, கெண்டை மீன் கண்களோடு ஒரு வாலிபனுடன் ஜதையாக வந்தாள் முனுசாமியின் மகள் மச்சகாந்தி" இப்படி, தமிழ் உரைநடை காலத்தோடு போட்டியிட்டு, புதிய வலிமையும் புது வனப்புகளும் ஏற்று, புத்துயிர்ப் போடும் புத்துணர்ச்சியோடும் வளமாக வளர்ந்து கொண்டி ருக்கிறது. இளந்தலேமுறையினர் புதிய பார்வைகளோடு புதிய கருத்துக்களோடும் வாழ்க்கையை கவனித்து, ஊக்கத் தோடும் உற்சாகத்தோடும் எழுத்துத் துறையில் ஈடுபட ஈடுபட தமிழ் மொழி புத்துாட்டம் பெற்று, குன்ரு இளமை யுடன் மிளிரும். -முற்றும்