பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 இது தமிழ்மக்களின் பாக்கியம். அண்மையில் 'பாரதியும் பாட்டும் என்ற நூல் வெளிவந்துள்ளது. இப்பொழுது பாரதியும் தமிழகமும் வெளிவருகிறது. இதைத் தொடர்ந்து பாரதியும் பாரததேசமும் மற்றும் பல நூல்கள் வெளிவரும். பாரதியின் மணிவாக்குக்கிசைய திரு. தூரன் அவர்கள் தம் அறிவுத் திறத்தாலே தமிழ் மக்களின் உயர்வு கருதி பாரதியின் அரிய பெரிய கருத்துக்களைத் தொகுத்துத் தர முன்வந்துள்ளார்கள். திரு. துரன் அவர்கள் கலைக் களஞ்சியத்துக்கு தொகுப் பாசிரியராக இருந்து நல்லறிஞர் கருத்துக்களை எல்லாம் தமிழ்க் கலைக் களஞ்சியத்துக்குக் கொண்டு வந்தவர்கள். இப்பொழுது பாரதியின் க ரு த் து க் க ளே எல்லாம் தொகுத்துத் தருவது தமிழ் மக்கள் செய்த பாக்கியம். நல்ல பல கருத்துக்கள் நாடு முழுவதும் பரவி, தமிழ் மக்கள் எல்லாச் செல்வங்களும் பெற திரு. தூரன் அவர் களின் தொகுப்பான அறிவுக் களஞ்சியப் பாரதி வரிசை நூல்கள் நிச்சயம் பயன்படும். தமிழ் மக்களும், தமிழ் மொழியும், தமிழ் நாடும் பலதுறைகளிலும் உயர்வு பெற உளமுருகி உயர்ந்த பல கருத்துக்களே, அறிவு முத்துக்களை வழங்கிய கவிக்கடல் பாரதியை நெஞ்சார்ந்த நன்றியுடன் போற்றி வணங்கு வோம். பாரதியின் அறிவு முத்துக்களைத் தொகுத்து அற்புதமான மாலையாக்கித் தந்துள்ள செந்தமிழ்ச் செல்வர் திரு. தூரன் அவர்களை நன்றிப் பெருக்குடன் போற்றிப் பாராட்டுவோம். ஏ. திருநாவுக்கரசு வானதி பதிப்பகம்