பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கத்திச் சண்டை 71 நான் பிரமித்துப் போய் விட்டேன். அத்தனே ஆச்சரியமாக அவ்விருவரும் கத்தி சுழற்றினர்கள். ஒருவருக்கும் காயமில்லை. ஆனல் நடுவே இவன் தலை போய் விடுமோ அவன் தலை போய் விடுமோ என்று எனது நெஞ்சு படக்குப் படக்கென்று புடைத்துக் கொண்டிருந்தது. பிறகு இருவரும் கத்தியைக் கீழே வைத்து விட்டுக் கொஞ்ச மேனும் ஆயாசமில்லாமல் மறுபடியும் மலையாளத்தில் ஸம்பா ஷணே செய்யத் தொடங்கி விட்டார்கள். கொஞ்சம் பொழுது கழிந்த பின்பு கெட்டை மாடன் போய் விட்டான். குள் ளச்சாமி யார் என்னே நோக்கிச் சொல்லுகிருர் :- தம்பி, காளிதாஸா, இந்த கெட்டை மாடன் ராஜயோகத்தினல் சித்தத்தைக் கட்டின வன். இவனுக்கு ஈசன் யோகசித்திக்கு வாட்போரை வழியாகக் காண்பித்தான். இவனுக்கு நிகராக வாள் சுழற்றுவோர் இந்தப் பூமண்டலத்தில் யாரும் கிடையாது. ஆனல் இவன் தன்னைக் கொல்ல வந்த பாம்பையும் கொல்லக் கூடாதென்று அஹிம்ஸா விரதத்தைக் கைக்கொண்ட மஹா யோகியாதலால், கொலைத் தொழிலுக்குரியதான கூர்வாளே இவன் கையில்ை தீண்டுவது கிடையாது. உடம்பு கன்ருக வசமாக்கும்படி செய்கிற ஹட யோக வித்தைகளில் ஒன்ருக அதை கினைத்து உன் போன்ற அபிமானிகளுக்கு மாத்திரம் தனது திறமையை ஸர்க்கஸ் கத்தி வைத்துக் கொண்டு காண்பிப்பான். வள்ளுவர் குலத்தில் 5ம் ஊரிலேயே இப்படி ஒரு மஹான் இருப்பது உனக்கு ஆச்சரிய மாகத் தோன்றலாம். இனிமேல் இதற்கெல்லாம் ஆச்சரியப் படாதே. ஹிந்துஸ்தானத்துப் பரதேசி பண்டாரங்களே யெல்லாம் மிகுந்த மதிப்புடன் போற்று. பரதேசி வேஷத்தைக் கண்டால் கும்பிடு போடு. எந்தப் புற்றில் எந்தப் பாம்பிருக்குமோ ? உனக்கு மேன்மேலும் மஹான்கள் தரிசனம் தருவார்கள்' என்ருர், நான் ஹிந்துஸ்தானத்தின் மஹிமையை நினைத்து வந்தே மாதரம் என்று வாழ்த்திக் குள்ளச் சாமியாரைக் கையெடுத்துக் கும்பிட்டேன். அவர் "ஜீவ" என்று வாழ்த்தி விட்டு, விடை பெற்றுக் கொண்டு சென்ருர்.