பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

22 முடித்தல் - தன்னினம் முடித்தல் என்னும் இலக்கண உத்தியின்படி இங்கேநான் எழுதியதை, இந்நூலைப் படிப் பவர்கள் பொறுத்தருள்வர் என நம்புகிறேன். கவிஞருக்குப் புரட்சிக் கவிஞர் என்னும் பட்டம் பிற் காலத்தில் சூட்டப்பட்டது. ஆனால், அவர் இளமைப் பருவத்திலிருந்தே புரட்சியாளராகத் திகழ்ந்திருக்கிறார் என்பது, அவர் கல்வித்துறைத் தலைவர் முன் காட்டிய புரட்சிச் செயலால் புலனாகும்.