பக்கம்:பாலபோதினி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

[எழுத்ததிகாரம்


வகரம்: அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஔ என்ற எட்டுயிரோடு மட்டும் கூடி மொழிக்கு முதலில் வரும்.


உ-ம். வயல்,வாழை, விளி, வீதி, வெளி, வேலை, வைகல்,வெளவு.


யகரம்: அ, ஆ, உ, ஊ, ஓ, ஒள என்றவற்றோடுமட்டும் கூடி முதலில் வரும்.


உ-ம். யவனர், யானை, யுகம், யூகம், யோகம், யௌவனம்.


ஞகரம்: அ, ஆ, இ, எ, ஒ என்றவற்றோடுமட்டும் கூடி மொழிக்கு முதலில் வரும்.


உ - ம். ஞமலி, ஞாயிறு, ஞிமிறு, ஞெண்டு, ஞொள்கிற்று.


19. ஈற்றுநிலை.- எகரம் நீங்கிய பதினோருயிரும் ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள என்ற பதினொரு மெய்யும் குற்றியலுகரமும் வார்த்தையின் கடைசியில் வரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/45&oldid=1468892" இலிருந்து மீள்விக்கப்பட்டது