பக்கம்:பாலும் பாவையும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 “என்னால் உங்களுக்கு எவ்வளவு கஷ்டம்!” என்று சொல்லிக்கொண்டே, அகல்யா கண்களில் நீர்த்ததும்ப அவனைப் பார்த்தாள். அவன் தன்னுடைய தாயாரின் போட்டோவைப் பார்த்தான். அப்போது, "குழந்தாய்! பரமசிவத்தை நம்பியா உன்னை நான் பெற்றெடுத்தேன்?-வருந்தாதே; நீகூட மீன் குஞ்சா என்ன, கரையில் எடுத்துப் போட்டதும் செத்துப்போவதற்கு?-இன்றல்ல; என்றும் உன்னையே நீ நம்பு! நிச்சயம் பிழைத்துக் கொள்வாய்!” என்று அவனுடைய தாயார் அவனைப் பார்த்துச் சொல்வது போலிருந்தது!