பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 72 மொழி, கருத்து, வினை! தனித்தமிழைப் போற்றாதார் நூலெழுதல் தமிழ்மொழிக்குக் கேடு செய்யும்! தனித்தமிழைப் பேணாதார் உரையாற்றல் தமிழினத்தை அடிமை கொள்ளும்! தனித்தமிழைப் பழித்திடுவார் அரசாளல் தமிழ்நிலத்தில் கீழ்மை சேர்க்கும்! தனித்தமிழே இனித்தமிழாம்! தமிழினத்திற் குரிமைதரும் எழுச்சி ஊற்றாம்! தாழ்ச்சியுறுந் தமிழினத்தின் மேன்மையெலாம் தமிழ்மொழியின் மேன்மை ஒன்றே சூழ்ச்சிமிகும் தமிழ்க்கலப்பை நீக்கிடுக, சொல்லாலும் எழுத்தாலும் வழக்கினாலும்! வீழ்ச்சியுற்ற வரலாற்றின் அடிநிலையில் தமிழ்வீழ்ந்த நிலையைக் காண்க! காழ்ச்செயிர்த்த வல்லுணர்வால் முனைத்தெழுந்து கலப்புமொழித் தீமை கொல்க! மொழிநலமே இனநலமாம்! முழுமாந்தப் பெருநலத்தின் பகுதிக் கூறாம்! மொழிநலத்தைச் சிதைத்திடுவோர் இனஞ்சிதைப்போர்! இனநலத்தின் முளையைச் சீய்ப்போர்! மொழிநலத்தைக் காவாமல் இனமிழந்த முழுநலன்கள் கோடி கோடி! மொழிநலமே கருத்துநலம்; கருத்திலையேல் வினையில்லை; விளைவும் இல்லை! - 1977