பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 80 புலமையைக் கீழ்மை செய்வீர்! இன்றுள புலவர் யார்க்கும் இலக்கண இலக்கி யங்கள் ஒன்றினும் தேர்ச்சி யில்லை; உள்ளுரன் சிறிது மில்லை; தொன்றுதீந் தமிழில் நல்ல தோய்வில்லை; புலமை யில்லை; நன்றெனும் கொள்கை ஒன்றில் நம்பிக்கை துளியும் இல்லை! ஒழுங்கிலை நேர்மை யில்லை; உண்மைநல் லுணர்வு மில்லை; மழுங்கிலா ஊக்க மில்லை; மானமும் மாண்பும் இல்லை; செழுங்கிளை புரத்தல் இல்லை; பெரியோரைச் சேர்தல் இல்லை; அழுங்கிடும் இனத்தைக் காக்கும் ஆர்வமும் உழைப்பும் இல்லை! பொய்மையும் கரவுங் கொண்டு புலமையைக் கீழ்மை செய்வார்! மெய்மையைக் கைநெ கிழ்ப்பார்! மேலேறக் கால்பி டிப்பார் ! நொய்மைசேர் உரைகள் கூறி நொடிந்திடு வினைகள் மேய்ந்து தொய்மைகூர் வாழ்க்கை செய்வார்! தோல்வியை வெற்றி யென்பார் ! அற்றைநாள் புலவர் போல அளப்பரும் புலமை மிக்கார் இற்றைநாள் ஒருவ ரேனும் இல்லெனல் இழிவே ஆகும்! வெற்றுரை அன்றாம், ஈது! வியன்தமிழ்ப் புலவீர்! நீவிர் கற்றுரை தமிழை என்றும் கயமைக்கு விற்றல் நன்றோ?