பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 85 வயங்குதமிழ் வளர்ப்பதற்கு வன்முறை இயக்கம் ஒன்று தேவை! மென்முறையாய் அன்போடும் அறிவோடும் மிகச் சொல்லி மேந்தமிழை வளர்க்கும் பாங்கைப் பன்முறையாய் விளங்கவைத்தும் பயனில்லை; பாழ்மொழியும் பிழைமொழியும் பல்கக் கண்டோம்! என்முறையாய்ச் சொன்னாலும் எழுதியுண்ணும் எத்தர்களும் தாளகரும் இணங்க மாட்டார்! வன்முறையாய் இயக்கமொன்று தேவையிங்கே, வணிகரையும் வம்பரையும் வயக்கு தற்கே! நற்றமிழில் இல்லாத வணிகர்வரிப் பலகைகளைப் பெயர்த்தகற்றி நலித்தல் வேண்டும்! சொற்றமிழில் பிழைசேர்க்கும் கலப்புமொழி எழுத்தாளர் இல்லங்களைச் சூழ்ந்து நின்று, முற்றுகையிட் டவர்குற்றம் எடுத்துரைப்போம்; தாளிகைகள் நிலைமாற முறையாய்க் கேட்போம்! அற்றெனிலவ் வெழுத்துகளைப் புறக்கணிப்போம்! தாள்களையும் குவித்தொருங்கே தணல்சேர்ப் போமே! - 1982