பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனிச்சாறு முதல் தொகுதி பாடல் விளக்கக் குறிப்புகள் - தமிழ் - 7. f0. இளமையிலே உளம் புகுந்த தமிழச்சியை அவள் பிறப்பு, பெருமை, புலமை, இளமை, வளமை முதலிய எழில் நலங்கள் கூறி ஏத்துவது இந்தப் பாட்டு. தமிழால் பிழைக்கும் எத்தர்களுக்குச் சொன்னது. "9.3.1953 அன்று ஒரகவையுள்ள எம் மகள் பொற்கொடிக்குக் கடுங் காய்ச்சலும், மார்ச்சளியும் வந்து ஐந்தாறு நாட்களாக மிகக் கொடுமை செய்தன. அதுகால், ஓர் இரவு முழுதும் நொந்து வருந்தி, நோய் தீர்க்கும் பொருட்டுத் தமிழ்த்தாயை வேண்டி எழுதிய பாக்கள் இவை. இவற்றை எழுதிய ஓரிரு நாட்களில் குழந்தை சாவினின்று மீண்டது குறிப்பிடற்குரியது" - என்று இப்பாடலுக்குக் குறிப்பெழுதியுள்ளார் பாவலரேறு. வடமொழியினின்றே தமிழ் தோன்றியது என்னும் கருத்தை மறுத்துக் கூட்டுக்கிளியிடம் கூறியது. பட்டின் சிறப்பினையும், அப்பாட்டு வெளிப்பாட்டுக்கான ஏந்துடையதாக மொழிச் சிறப்பு பொருந்தியதாக இருத்தல் வேண்டுமென்பதற்கேற்ப அமைந்துள்ள தமிழ்மொழியின் அருஞ்சிறப்பினையும் அழகுற விளக்குகிறார் பாவலரேறு. (பழைய குறிப்புச் சுவடியினின்றும் எடுக்கப்பட்ட இப்பாடல், ஆங்காங்குச் சிறிது சிதைவுபட்டுள்ளமையால் சிலவிடங்களில் சொற் பொருளியைபு புலப்படவில்லை) முத்தமிழ் இலக்கணங் கூறும் முப்பது குறள் வெண்பாக்கள். தமிழ்த்தாயை வாழ்த்திப் புகழ்பாடும் இனிய பத்துப் பாடல்கள். சுவைத்துப் போற்றத் தக்கவை. தமிழினம் மானமிழந்து செத்தழிந்து போகுமுன்னே முனைந்து முத்தமிழைக் காக்கவேண்டும், வாருங்கள் என்று விடுக்கும் அழைப்பு இது. தமிழைக் கெடுக்கின்ற கெடுமனங்களை வெட்டிப் புதைப்பதற்கு எடுத்த துளுரை இது. - மொழியெனப்படுவது விழியெனக் கூறித் தெள்ளுதமிழ் மொழியாமே மூங்கையவர் சொற்கலந்து மொழிகுவதும் தமிழாமோ? தமிழ்நாட்டவரே, தூய தமிழில் பேசுங்கள் என்று அறிவுறுத்துகிறது இப்பாட்டு. "தாயைக் காத்திடு முன்னம் ஆன்றோர் தமிழைக் காத்திட எழுவாய்" என்று மகனுக்குப் பெற்ற தாய் கட்டளையிடுகின்றாள் இப்பாட்டில். தமிழ்த்தாய்க்கு வந்த இடர்ப்பாடுகளைக் களையாமல் காதலும் கவர்ச்சி தராது என்னும் அழகிய நான்கு வெண்பாக்கள். سیم--پf&56--سب