பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. 61. 62. 63. 64. 65. 66. 67. 68. 69. 70. 72. 74. 75. கணிச்சாறு முதல் தொகுதி சங்கரப் பார்ப்பனக் கூச்சல்களுக்கு அக்கால் அமைச்சர் வீரப்பன் தாளம் தட்டிக்கொண்டிருக்கையில், இத்தகைய போக்குகளைச் சரிசெய்ய வன்முறை இயக்கமே தேவை என்பதாக எண்ணிப் பாடியது. இவ்வின முன்னேற்றத்திற்கென உள்ள ஏராளமான பணிகளை விடுத்துப் புலவர்கள் வெற்றுச் செயல்களில் ஈடுபட்டிருக்கிற சூழலை விளக்கிக் கடிந்து எழுதப்பெற்றது இப்பாடல். அக்கால் அரசால் தமிழ் வளர்ச்சிக்கென நிறுவப்பட்ட பல்வேறு இயக்கங்களும், துறைகளும் அறுக்கமாட்டாதான் இடுப்பில் செருகப்பட்ட அரிவாள்கள் போன்றவையெனக் கடிந்து எழுதியது இது. இந்தி எதிர்ப்புஇந்தித் திணிப்பைத் தமிழர் இனியும் பொறுத்திடமாட்டார் என்பது. 1959-இல் நேருவுக்கு விடுத்த தூது. மொழியே விழி; அதைக் காவாவிடில் வரும் பழி தமிழைச் சீர்குலைக்க வரும் இந்தியை ஒழி என்பது. உரம் குன்றிப் போன தமிழர் முனைந்து மறுமலர்ச்சியுற்று எழல் வேண்டும் என்பது. இந்தி மொழியைப் புகுத்தினால் என்ன நேரும் என்று ஆளும் தலைவர்க்கு எச்சரிப்பது இது. - இந்தி வருமுன் அணையிட வேண்டுமென்பது. செந்தமிழ்க்குக் காப்பளியா அரசியலைச் சிதைத்தொழிப்பீர் என்பது இது. தமிழ்ப்பயிரில் வைத்த தீ போன்றது இந்தி என்பது இது. இருந்தபடியே இருந்தால் இந்தியை நீக்க முடியாது என்பது. இந்தியை அறவே தடுத்து நிறுத்தவில்லையாயின் தமிழனுக்கு நாடு என்பது ஒன்றில்லாமல் போய்விடும் என்று முன்கூட்டி யுரைக்கின்றது இப்பாட்டு. மறமிழந்த தமிழன் மாளல் நன்றென்பது. . 1965-கடலூர்க் கிளைச் சிறையில் எழுதியது இது. 1985-இல் இந்திக்கிளர்ச்சியில் ஈடுபட்டு வேலூர்ச் சிறையில் இருந்த பொழுது, எழுதியது. சிறையாளிகள் ஆசிரியர் சிறைக்கு வந்தது எதற்கு என்று கேட்டதும், அதற்கு அவர் விடை கூறியதும் ஆகிய நீண்ட பாடல் இது 25-ஆம் பாடல் குறிப்புப் பார்க்க. - - மும்மொழித் திட்டம் கொணர்ந்த பொழுது அதை எதிர்த்தது. தமிழர் தமிழையும் ஆங்கிலத்தையுமே கற்றல் வேண்டும் என்றது.