பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 21 பனிக்குன் றதிர்த்த பழம்பே ரரசர் பணிந்துயர்த்த இனிக்குந் தமிழ்ப்பா வெழுதும் இணையறு வின்புலவோர் கணிக்குந் நிகராப் பலநூல் எழுதிக் களித்ததெலாம் - தனிக்குன் றணையாய் இனிக்காண் குவமோ தவழ்கொழுந்தே! - கொழுங்கட் பிழிவே! நறவே! நறுஞ்சுவைப் பால்கலந்த பழங்கெழு ஊணே! உடலே! உயிரே! பணிவொடுர்ே வழங்கெஞ் சிறுநா வளரின் னிசையே! இயல்நடமென் - றெழுங்கலை யேமகிழ் வேவுல கேயினை யில்லையன்றே! - 1958