பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

தாயுரை

உன்னைப் பெற்ற தாயுனக் கிதனை உரைக்கின் றேனடா, மகனே இது முன்னைக் கொடுத்த செல்வங் களிலும் மூத்தது கேளடா, மகனே! உண்ணக் கொடுத்த பாலிலுஞ் சோற்றிலும் ஊட்டிக் கொடுத்த தமிழை - உளம் எண்ணக் கடுத்த வகைபோல் - அதனின் எழிலைக் கெடுத்தனர் அடடா! மண்ணைப் படுத்தினர் அடிமை! தமிழின் மாந்தரைத் தடுத்தனர் உயர்வில் - நம் கண்ணைக் கெடுத்தனர். எனினும் உய்வோம்; கருத்தைக் கெடுத்தனர் அடடா! பண்ணைக் கொடுத்த யாழை இசைக்கையில் பறையை எடுத்தனர் முழுக்க -தேன் உண்ணக் கொடுத்த கையினால் நஞ்சை ஊட்டத் துணிந்தனர் அடடா! தூங்கப் படுத்தனர் தமிழர்! இனியவர் துயில் நீங் கிடுதல் கடினம் - உயிர் வாங்கப் புறப்படு; பகைமுன் உறையின் வாளைக் கையினில் எடடா! தாயைக் காத்திடு முன்னம், ஆன்றோர் தமிழைக் காத்திடற் கெழுவாய் - ஒரு பேயை அரியணை வைத்தார் அவர்தம் பிழையைப் போற்றிடில் கெடுவாய்! - 1959