பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 15 29 உயிர் வாங்குவேன்! தாய்க்குறின் கேடே தழற்படு முளமே! சேய்க்குறின் தீங்கே விழிநீர்ப் படுமே? கேட்டி எலுவ! நாட்டுத் துயர்தரின் ஈட்டி யாயினும் எந்தோள் அடுமே! பல்லா யிரமாண் டுயர்வழி பயின்ற செல்லா நல்லிசை வெல்லத் தமிழ்மொழிக் கொருவன் இழிசெயின் நெறியிகந் தருமுயிர் வாங்குவ னவ்விடத் தானே! - f 960 'கவிதை மேற் கவிதை' கவிதை ஒளிர்மின்னல் என்போம்! - உடன் கிளர்த்துக் கிளைத்து மிளிர்ந்திட லால்! - நல்ல கவிதை வீழ் அருவி என்போம்! - உளங் கல்வி உடல் எங்கும் குளிர்செய்தலால்! - இன்பக் கவிதை ஒரு குழந்தை என்போம்; - நாம் கூவச் சுணங்கிக் கூவா தருகலால்! - ஒளிக் கவிதை புது நங்கை என்போம்; - நாம் கூடென ஊடி, உடக் கூடலால்! கவிதை யிளந் தென்றல் என்போம்; - செவி குளிர்ந்திடுஞ் சொல்லால் உளந் தோயலால்! - நல்ல கவிதை பெரும் புயலா மென்போம்; - தீமை கொன்றுள மெங்கும் மாற்றஞ் செய்தலால்! - இன்பக் கவிதை மூண்டெரி தீ என்போம்; - உளங் காய்த்துரு மாற்றி உயிர் கவ்வலால் - ஒளிக் கவிதை நறுந் தாய்மை என்போம்; - தனைக் கற்றார் தமைப்பேணிப் புகழ் காத்தலால்: -1960 (?)