பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் கொந்தார் மலர்க்கொண்டைக் கோதையரீர்; பாடேமுக் கிந்தா வெழுந்தேம்என் றென்னா தயர்வீர்போல், செந்தா மரைமுகத்தைப் பஞ்சணையிற் சேர்த்தீரால்! வந்தார் தமிழழிக்க; வாயவிழ்ந்தார் வார்படைக்கே! செந்தோள் மறவர் சிறுத்தாரென் றேயெழுந்து முந்துவீர் அன்னை மொழிக்கென்றே ஆர்ப்பரிப்பீர்! சிந்துவீர் செங்குருதி தாய்மைச் செருக்குலத்தீர்! இந்த நொடியே எழுகேலோ ரெம்பாவாய்! 5 எண்ணற் கினிக்கும்; எடுத்தியம்ப வாயினிக்கும்; பண்ணு மொழிகேட்பார் செவியினிக்கும் பைந்தமிழை உண்ணும் சுவடியிலே நஞ்சிட்டார் ஒண்டொடியிர்! கண்ணென் எழுத்தும் கருத்தும் கலைப்பாரால் பெண்ணென் பிறவியினைப் பெற்றேமென் றெண்ணாமே விண்ணதிர ஆர்த்துப் பிடிக்கூட்டம் போலெழுந்து மண்ணின் உரிமை மொழியுரிமை மீட்குதிரேல் பெண்ணுரிமை நாட்டுகின்ற பெற்றியலோ ரெம்பாவாய்! 6 வல்லடிமை கொண்டார்; வரும்பொருளிற் பங்கெடுத்தார்; மல்லடிமைச் சேற்றில் மனத்தைப் பதமிடுவார்; சொல்லடிமை செய்வதற்கே தோதுபல சொல்லிடுவார்! இல்லறத்தைத் தள்ளி இளம்பருவச் சீரொதுக்கி வல்லமற நெஞ்சை வளையா இரும்பாக்கி - ஒல்லைப் பெரும்போர் உலைக்காமே ஏற்றியநாண் வில்லடியின் மேற்புருவ வேல்விழியே! தூங்குதியே! எல்லே இளையாய், எழுகேலோ ரெம்பாவாய்! 7 பெற்ற மகர்வாய் தமிழைப் பிலிற்றாமல் வெற்று மொழியாமோர் வேம்பை - உயிர்கழிக்கும் புற்றரவ நஞ்சைப் பிழியும் புலையோரைச் செற்றுச் செருக்காமல் சிற்றச் செருவிழி, மூ டுற்ற மயக்கத் துருண்டும் புரண்டும்நீ மற்றிங் குறங்கல் அழகோ, மதிமுகமே? கற்ற தமிழ்மேல் கடுஞ்சூள் உரைசாற்றி இற்றே இளம்பிடியே நூறேலோ ரெம்பாவாய்! 8 37