பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 47 அணிதமிழ் கற்க அண்ணா மலைவரும் மணியெனும் அமெரிக்க மாணவ ரிடத்துத் தமிழ்மொழி ஈதெனத் தகவிலா மொழியை உமிழ்ந்து கொள்ளை ஊதியம் பெறுவான்! ஒன்றை ஒன்னாய் இரண்டை ரெண்டாய் மூன்றை மூனாய் அவரிடை மொழிவான்! பேச்சுத் தமிழெனக் கல்லார் பிதற்றலைக் காச்சு மூச்செனக் கற்பிக் கின்றான்! அரைவேக் காட்டின் ஆசிரி யன்மார் விரைவாய்க் கற்றுக் கொடுத்திடும் இழிவை நேரிலே காணில் நெஞ்சு கொதித்திடும்! அரசினர் கேளார்! அண்ணா மலையின் கரிசனக் காரர் கவனியார் இதனை! தெ. பொ. மீ.யின் தலைமையில் தமிழ்மொழி காப்பா ரின்றிக் குலைந்தது நாளும்! பன்மொழிக் குரிசில் பாவா ணர்தம் வன்மொழி யறிவு வாடிக் குலைந்திட ஒலிமுறை சொன்முறை மொழிவர லாறு துளியும் அறிகிலாப் பேதையர் யாவரும் அண்ணா மலையுள் அமர்ந்து கொண்டே உண்ணா உணவுக்குத் தமிழ் உலை வைப்பார்! விழியிலார் விழிமருத் துவம்பார்ப் பதுபோல் மொழியறி யாதார் மொழித்துறைத் தலைவராய் இற்றை அமர்ந்தனர்; இழிவடா இழிவு! அற்றை நாளினும் தமிழ்மொழி இக்கால் பல்லாற் றானும் பரவிய தென்று புல்லிய வாயால் புகல்கின் றானே! ஐயகோ தமிழே! நினக்கிவ் விழிவோ! உய்யுமோ தமிழும்? தமிழனும் உய்வனோ? சிரைத்திடு வானிடம் தமிழைத் தந்தால் நரைத்தது தமிழெனத் தமிழினைச் சிரைப்பான்! 95 100 105 1 10 1 15 120