பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 28 49 முதலமைச்சே முதற்பகை! தமிழகத்தின் முதலமைச்சே தமிழ்மொழியின் முதற்பகையாய் இருக்கும் கீழ்மை, தமிழகத்துள் அல்லாமல் பிறநாட்டில் எங்கேனும் நடப்பதுண்டோ? தமிழ்மொழியைக் காவாதான் தமிழ்த்தலைமை தாங்குவதோ? தமிழ கத்தீர், தமிழகத்தின் வாழ்வெல்லாம் அன்னவரின் வீழ்வன்றோ? எண்ணு வீரே! - 1965 மற்போர் தொடங்குக! கற்போரே செந்தமிழைக் கலக்குகின்றார்; காசுபணம் பதவிநலம் தமக்கே மானம் விற்போராய் வாழுகின்றார்; விளைவெல்லாம் வீழ்த்துகின்றார்; இனிமேலும் அவர்பால் சென்றே சொற்போரால் மல்லாடிச் சோர்வுறுதல் முறையன்று தமிழ்நினைவு சூம்பும் முன்னே மற்போரைத் தொடங்கிடுவாய்; எழுதமிழா! மறுநொடியில் விளைவுபல மலிதல் காண்பாய்! - 1966