பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 36 .59 அத்தனை, பாட்டனை அடிமைசெய் ததுபோல் ஆரையிங் கரற்றுவாய் இன்னும்? எத்தனை ஆண்டுகள் இழப்பதெம் உரிமை? எழுந்திடின் கழுகுமைத் தின்னும்! - 1970 'நமோ ஓம் நமக! ஒ!ஒ ஓ குமுதமே தமிழ் தின்னுங் கழுதையே! ஊர் கெடுக்கும் விகடன் கதிரே!! ஒப்பரிய தமிழென்னும் உண்ணிர்க் குளத்தையே உழப்புகின்ற எருமைக் குலமே! ஏ!ஒ1ஆ தித்தரே! தினத்தந்தி ராணி-யால் எந்தமிழைக் கெடுக்கும் உருவே! . இங்கங்கெ னாதபடி தமிழைப் புதைக்கவே எழுந்துலவும் இதழ்கள் இனமே! ஈவோ,இ. ரக்கமோ வைக்காதீர்! உங்களுக் கிருக்கின்ற நமைச்சல் தீர, எப்படியும் எழுதுங்கள்! எழுதிக் குவியுங்கள்!! எல்லாமும் இலக்கி யந்தான்!!! நாவோ,வெண் மூளையோ நக்குவதில், எண்ணுவதில் நரகலோ இழிவோ என்ன? - • , நல்லதமிழ் என்பதெது? நல்லநடை என்பதெது? “நமோ ஒம் துக்ளக் நமக!” - 1971