பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 61 வெற்றிக்கென் வேண்டுவதே ? நெஞ்சில் தமிழ் நினைவு; நீங்காத மெய்யுணர்வு; செஞ்சொல் குமிழியிடும் சிதையாத பாட்டுயிர்ப்பு; துஞ்சா இரு விழிகள்; தொய்ந்து விழா நற்றோள்கள்; அஞ்சுதல் இன்றி அயர்வின்றி நின்றவுரம்; எஞ்சுகின்ற காலமெலாம் ஏற்ற நறுந்தொண்டு; நஞ்சு மனங் கொண்டார் நடுக்கமுறுஞ் செந்துணிவு; கொஞ்சமிலை, நல்லிளைஞர் கூட்டமோ கோடி பெறும்! விஞ்சுகின்ற செந்தமிழே, வெற்றிக்கென் வேண்டுவதே? - 1972