பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

கனிச்சாறு இரண்டாம் தொகுதி

இக்காலத் தமிழகத்தில் இருக்கும் தீமை எதிர்காலத் தமிழகத்தில் இருக்கா தென்பேன்! திக்காலுக் கோரிருவர் என்றில் லாமல் - திரண்டிருப்பார் தமிழ்த்தலைவர்! தமிழர் கூட்டம் தக்காரின் மொழி கேட்கும்; தகவே செய்யும்! தம்கடமை அறமுடிக்கும்; தமிழைக் காக்கும்! அக்காலிற் குலப்பிரிவு, சமயக் கூச்சல்,

அடிதடிகள் அருவருப்பு அறவே நீங்கும்! - 9

தமிழ்ப் பண்பு தலையெடுக்கும்; ஒடுங்கும் கீழ்மை! தண்டமிழில் பெருங்கலைகள் ஊற்றெ டுக்கும். உமிழ்தக்க தீயவரும் பிழை உணர்ந்தே உயர்ந்தோரும் பாராட்டத் திருந்து வார்கள்! கமழ்பெருக்கும் தமிழ்மணமிவ் வுலக மெல்லாம்: கன்னியர்க்கும் இளையோர்க்கும் மெய்ம்மைக் காதல் அமிழ்துற்றுப் போல்பெருகும்; பெருகும் வாய்மை! அனைத்துலகும் ஒன்றென்னும் நினைவுண் டாகும். 19

பொருள் மேய்ச்சல் விலகிப்போம்; பொய்செத்துப்போம்; புத்துலகத் தொடர்புவரும்; அறிவு வீறும்!

இருள் விலகும், ஒளிபிறக்கும் தமிழர் வாழ்வில்

ஏமாற்று வெறும்பேச்சு தொலைந்து போகும். அருள் மலரும்; அன்பூறும் செயலில் பேச்சில்! அனைவருமிங் கொருநிறையென் றறம்பி றக்கும். மருள்வாழ்க்கை போயொடுங்கும். வறுமை மாயும். மாளாத இலக்கியங்கள் சுரப்பெ டுக்கும்! f :

முடிவாக ஒருசெய்தி! தமிழர் வாழ முழுவாழ்வும் உழைத்தீர்கள்; மனைவி மக்கள் விடிவாக ஒருநலமும் தேட வில்லை; விளைவின்றி அவரின்று வாடு கின்றார். அடிவாழைக் கன்றுக்கிங் காக்க மில்லை! - அவர்க்காகக் கண்ணிர்விட் டழுகின் றேன்நான். மடியாத தமிழுணர்வே: மலையா நெஞ்சே! மாளாத புகழ்க்குன்றே! வணங்கு கின்றேன்! -1967