பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

125

இனியேனும் ஒன்றிணைவீர்?

கதைபேசி, இலக்கியங்கள் சலிக்கப் பேசிக் கற்பனையாம் பொய், புளுகில், கலைகள் தம்மில் புதைபட்டீர்; காலமெல்லாம் போக்கி விட்டீர்! புரைபட்டீர்; சிறைப்பட்டீர்; பார்ப்பான் காலில் உதைபட்டீர்; வதைபட்டீர்; அடிமைப் பட்டீர்! ஒடோடித் துயர்ப்பட்டீர்! உருப்பட் டீரா? சிதைபட்டீர், தமிழர்களே! இனிமே லேனும் சேர்ந்திணைந்து செயல்பட்டே இனங்காப் பீரே!

மண்சுமந்தீர்; கல்சுமந்தீர்; வானை முட்டும் மாளிகைகள், கோபுரங்கள், கட்டி வைத்தீர்! விண்சுமந்த முகில்தடவும் காட்டை யெல்லாம் வெட்டி நல்ல நகராக்கி, வெளிநா டேகிக் கண்சுமந்த நீர்சுமந்து, கையற் றேங்கிக் கால் நடையாய்த் துயர்சுமந்து, நெஞ்ச மெல்லாம் புண்சுமந்தீர் தமிழர்களே! உருப்பட் டீரா? - பொறைகமந்தே இனியேனும் இனங்காப் பீரே!

புகழ்படைத்த வரலாற்றைப் பொய்யாய்த் தள்ளிப் புளுகுக்குப் புராணங்கள்’ எனும்பே ரிட்டுத் திகழ்கின்ற பெருமையுடன் அவற்றை யெல்லாம் தெருத்தெருவாய்ப் போய்ச்சொல்லி, பெருமை யோடு நிகழ்கின்ற விழாக்களிலே ஆரி யத்தை -

நிலைநிறுத்தி, அதற்குக்கீழ் நீங்கள் நின்றே

இகழ்தேடும் தமிழர்களே! உருப்பட் டீரா? இனியேனும் ஒன்றிணைந்தே இனங்காப் பீரே!

கட்டிவைத்த கோயிலுக்குள் - கருவ றைக்குள் கல்லைவைத்துக் கடவுளெனும் பெரும்பேர் சொல்லி எட்டிநின்று கும்பிடென்பான்; இளித்த வாயோ டிலைவிரித்துப் படைத்திட்டு, விழுந்து, முன்னால் முட்டிதேய் கின்றவரை கும்பிட் டீர்கள்! மூடர்களே, தமிழர்களே ! உருப்பட் டீரா? - அட்டியிலை அவனுயர்ந்தான்! இனிமே லேனுேம் அனைவிரும் ஒருங்கிணைந்தே இனங்காப் பீரே!