98
- 56
கதவு திறந்தது!
கதவு திறந்தது:
கதிர்வான் எழுந்தது; கால் நடை கொண்டது, கடும்பணிக்கே! உதவும் உளங்கள். ஒன்றின; மீண்டும் உயிர்த்தேன் தமிழெனும் கண்மணிக்கே!
பழஞ்சுவர் இடிந்தது;
பாதை தெரிந்தது;
பம்பரக் கால்களும் சுழல் தொடங்கும்! இழந்தபல் காட்சிகள் இறவா நினைவுகள் இயங்கின; பகையோ போய் முடங்கும்!
கம்பிகள் தெறித்தன; விலங்குகள் கழன்றன! - காவல் நெருக்குகள் எனைவிலகும்! தும்பிகள் வந்தன; துந்துபி முழங்கின! தோலா முயற்சிகள் நடைஉலவும்!
வானம் அசைந்தது;
மரங்கள் எதிர்ந்தன: - வழிசுழன் றது:ஓ! நடக்கின்றேன்! மானம் நிமிர்ந்தது: மார்பும் விரிந்தது! மலை, வயல் வெளி ஆறு கடக்கின்றேன்!
கண்கள் மலர்ந்தன!
கைகள் அசைந்தன்! கருத்து மிதந்தன காற்றினிலே! பண்களுந் தமிழே. பாடலுந் தமிழே! பயில்நாடகம்உயிர் ஊற்றினிலே!
ஆண்டா நடந்தது:
அணுச்சிதை வில்லை! அடடா, உயிர், உளம் உடலினிலே!. பூண்டஎன் கோள்தலம்! புதுமைத் தோள் நல்ம்! புதுப்புது விளைவுகள் நடையினில்ே:
- 1977