151
219
நினைக்கின்றேன்; நினைக்கின்றேன். நெஞ்சு புண்ணாகின்றேன்!
உய்வடைந்து தமிழ்மொழியும் தமிழினமும் நாடும் உயரட்டும் உய்யட்டும் என்றே என் உண்ர்வாய்ப் பொய்வறியாப் பெருங்கருத்தாய் புரையில்லாச் செயலாய்ப் பொழுதெல்லாம் நாளெல்லாம் மாதம்ஆண் டெல்லாம் தொய்வறியா உடம்போடும் உயிரோடும், மக்கள் தொளைச்செவியில் உள்நுழைத்துத் துளிர்விடும்நாள் பார்த்தேன்! செய்வறியா உணர்வினராய்ச் செயலில்லா தவராய்ச் சேர்ப்பதிலும் தின்பதிலும் உயிர்தேய்கின் றாரே !
ஈங்கிவர்தாம் இப்படியென் றால், இந்த நாட்டில்
இருக்கின்ற தலைவ்ரெல்லாம்
அறிவாளர் எல்லாம் வீங்குகின்ற நெஞ்சினராய்ப் - பேச்சினராய், மக்கள் - விளங்காமல் போகட்டும். வீழட்டும் என்றே துரங்கவைத்துத் தொடையினிலே கயிறுதிரிக் கின்றார்! ‘. .
தொன்தமிழர் நலிகின்றார்;
மெலிகின்றார் : அந்தோ!
நீங்கவைத்தித் துன்பத்தை
நிலைக்கவைக்க இனத்தைநினைக்கின்றேன்; நினைக்கின்றேன்;
நெஞ்சுபுண்ணா கின்றேன்!
- 1990