பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

அன்னை ஒருத்தி மறத்தியன்றோ? நமை ஆர்க்கவள் பெற்றெடுத்தாள்? - இளங் கன்னி நறுந்தமிழ், கன்னி நறுந்தமிழ் காத்திடுவீர் மறவீர்!

குன்றினைத் தோளெனக் கொள்கை உயிரெனக் கூறியது ஆர் தமிழா? - போர் முன்றிற் புறமுது கிட்ட முகத்தினில் முகம்பட விழித்தவர் யார்?

"சென்று, வென்றால்வரு வேன்.இலை வாள்வரும்; சிறுவனுளான் அனுப்பு - அவன் - நின்று பட்டான்எனின் நின்னுயிர் அனுப்”பென நிகழ்த்தியது ஆர் தமிழா? . . . . .

கூட்டுக்குள் எத்தனை நாள் உயிர் தங்கிடும் கூட வருவதெவை காண்! - தமிழ் - நாட்டுக் குழைத்திட நாட்டுக் குழைத்திட நாட்டமி லார் எவரே?

வீட்டுக் கோராள்வர, வீட்டுக் கோராள்வர வேண்டுகின்றோம் மறவீர்! - சிறை காட்டுக் கென்றும்சுடு காட்டுக்கென்றும், மறக் கழலணி பெறுவோமே! - -

அற்றைத் தமிழ்க்குலம்! அற்றைத் தமிழ்க்குலம்! ஆண்ட தமிழ்க் குலமே! - மொழிப் பற்றை இழந்தனை! பான்மை இழந்தனை! பகலில் வெருண்டனையே!

ஒற்றைத் தனியவன் ஆயினும் தமிழ்மகன் உளங்குன் றிடுவானோ? - தனைப் பெற்றெடுத் தாள்தமிழ்த் தாயெனின், அவள்படும் பீழை பொறுப் பானோ?

- 1954