பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனிச்சாறு இரண்டாம் தொகுதி

ஆ. சீர் அமைப்பு:

1. ஒலிநயத்தால் இணைகின்ற சீர் அமைப்பு. 2. கருத்தின் உணர்வுக்கேற்ற சீர் நீளம்: 3. வகையுளி அல்லது சொற்பிரிப்பால் பாட்டின் ஒட்டத்தையும் அழகையும் குறைக்காமல், முழுச் சொல்லால் அல்லது சொற்களால் அமைந்த சீர்கள்.

இ. யாப்பு. -

1. பிழையற்ற யாப்பு. 2. கூறப்போகும் கருத்தின் உணர்வை மழுங்கடிக்காத யாப்பு வகை. - - 3. உணர்வுயர்ச்சிக்கும் கருத்தகலத்திற்கும் ஏற்பத்

தெரிந்தெடுக்கப் பெற்ற யாப்பு. - ஈ. அணிகள். ... " . . .

1. எளிதே விளங்கிப் பாடற் கருத்துடன் உடனே பொருந்துமாறு இருக்கும் உவமைகளும் உருவகங்களும். 2. பாட்டின் பெருமையைக் குறைக்கும் பிற ஆரவார

அணிகள் பெரிதும் தவிர்க்கப் பெறுதல்,

உ. கருத்து.

1. மயக்கம் தராது உடனே புலப்படும் தெளிவு நிறைந்த

கருதது. - - 2. பொது மனத்திற்குப் புலப்படாத உயர்ந்த கருத்து. இனி, முன்னைக் காலத்து, இயற்கை உணர்வின் ஒலியொழுங்குக் கொத்த மரபு தழுவிய பாடல்கள், தாய்மையுணர்வு நிரம்பிய ஒரிளம் பெண் பெற்றெடுக்கும், நல்ல அழகிய அறிவறிந்த நிறைமாதக் குழந்தைகள் போன்றவை. சோம்பலாலும் அறிவுக் குறுக்கத்தாலும் மன இழிவாலும் பிதுக்கப்பெறும் இக்காலத்து மரபு நழுவிய பாடல்கள், தாய்மையுணர்வு நிரம்பாத பெண்ணுரு சான்ற ஒருத்தி, அரைகுறை முதிர்ச்சியோடு பெற்றெடுக்கும், உறுப்புகள் குறைவுற்று அழகும் அறிவும் குறைந்த, குறைமாதக் குழந்தைகள் போன்றவை. நன்கு வளர்ச்சியுறாத உறுப்பு நிலைகளும், உணர்வு நிலைகளும், அக்குழந்தைகளைக்