பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

49

ஈங்கிவர்க்குச் செய்துவந்த எல்லையிலா நன்முயல்வும் தேங்கிநின்ற நல்லுணர்வும் தீதில் அறவினையும் காட்டு விலங்குகளின் கூட்டத்திற் காட்டினமால் ஈட்டும் பெரும்பயனிங் கெத்தனையோ கண்டிருப்போம்:

வெம்புலியும் சுற்றிருக்கும்; வல்லரிமா பாட்டெழுதும்! பம்பும் மலைப்பாம்பும் பண்பாடு பெற்றிருக்கும்! . யானை அரசமைக்கும். வெங்கரடி யாழிசைக்கும்: பூனை அறம்பயிற்றும்; புட்களினம் பாட்டிசைக்கும்!

குள்ளநரி ஒற்றாடும் கோநாய்கள் ஊர்காக்கும் துள்ளுமிள மான்களினம் தோதாய்க் கலைபயிலும்!

கூன்முயலும் ஆயும் குரங்கு பொறியியக்கும்: கானெருமைக் கூட்டமெலாம் கட்சித் தலைம்ைபெறும்!

ஒட்டக் குதிரை உடல்நலத்தைப் பேண வரும்!" காட்டுக் கழுதையினம் செய்தொழில்கள் கற்றிருக்கும்! ஒட்டை உழவு செயும்! பன்றி பொருள்விற்கும்!

நெட்டைச் சிவிங்கி நெடுமரத்தில் காயுதிர்க்கும்! o ஆக்கள் அறமுரைக்கும்; ஆடுகளும் பாடுழைக்கும்! நோக்கம் அறிந்து முதலை படகோட்டும்! * .

இத்தகைய நல்மாற்றம் ஏற்றமுறப் பார்த்திருப்போம்! சொத்தை மனங்கொண்ட சோம்பேறி மக்களுக்குப் பல்வா றுழைத்துப் பயன்கானா தேங்கியிரோம்! செல்வழியும் எண்ணாச் சிறியோர்க் கழுதிருக்கோம்! உள்ளுணர்வு பேனா உலுத்தர்க்கு நீரிறைத்தே

எள்ளளவும் நல்விளைவு கானா திளைத்திருக்கோம்! 50

செந்தமிழும் மாய்ந்ததுகாண்: . ." செந்தமிழர் செத்துவிட்டார்: எந்தவகை அன்னவர்தாம் ஈடேறிப் போவாரோ! தன்முயல்வும் இன்றித் தனிச்சிறப்பும் ஒன்றின்றி என்வகையும், தேராதார். எப்படித்தான் வாழ்வாரோ? உள்ளுணர்வும் சாம்பி உயர் கருத்தும் மள்ய்ந்ெg ாழிந்து