146
திருக்குறள்
தமிழ் மரபுரை
226. அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
(இ-ரை.) அற்றார் அழிபசி தீர்த்தல் - வறியவரின் கடும்பசியைத் தீர்க்க; அஃது ஒருவன் பொருள் வைப்புழி பெற்றான் - அவ்வறச் செயலால் ஒருவன் தான் தேடிய செல்வத்தை மறுமையில் தனக்குப் பயன்படுமாறு சேமித்து வைக்கும் ஏம வைப்பகத்தைப் (Savings Bank) பெற்றானாவன்.
கொல்வது போல வருத்துவதனாலும். குடிப்பிறப்பு கல்வி மானம் அறிவுடைம் முதலிய பேறுகளையும் பண்புகளையும் அழிப்பதனாலும், கடும்பசி 'அழிபசி' யெனப்பட்டது. வறியவரின் பசியைச் தீர்த்தற்குச் செல விட்ட பொருள் பின்பு தனக்கே வந்துதவுதலால், அருள்நோக்கிச் செய்யா விடினும் தனக்குப் பயன்படும் அறம்நோக்கியேனும் அதைச் செய்க என்றவாறு.
'தீர்த்தல்' தல்லீற்று வியங்கோள், பெற்றான் என்பது தேற்றம்பற்றிய காலவழுவமைதி, அஃதொருவன் என்பது அதுவொருவன் என்றும் இருக் கலாம். அடுத்த அதிகார முதற் குறளில் 'வாழ்த லதுவல்லது' என வருதல் காண்க.
227. பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது.
(இ-ரை.) பாத்து ஊண் மரீஇ யவனை - எப்போதும் பலரொடும் பகிர்ந்துண்டு பயின்றவனை; பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது பசியென்று சொல்லப்படும் கொடிய நோய் தாக்குதலில்லை.
நாள்தோறும் வந்து வருத்துவதாலும், நல்லார் வல்லாருட்பட எல்லாரையுந் தாக்குவதாலும், எம்மருந்தாலும் அறவே நீக்கப்படாமையாலும், பிற நோய்கள் அழிக்காதவற்றையும் அழித்து மறுமையிலுந் துன்புற வழிகோலுவதாலும், பசி தீப்பிணி யெனப்பட்டது. "இறைக்க வூறும் மணற்கேணி: ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்." ஆதலின், பாத்துண்டு பயின்றவனைப் பசிப்பிணி தீண்டுவதில்லை. தீண்டுவதுமில்லை யெனவே வருத்தாமையைச் சொல்ல வேண்டுவதில்லை. 'மரீஇ' (மருவி) சொல்லிசை யளபெடை. அரிது என்பது இங்கு இன்மைப் பொருளது.
223. ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.