உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

ஒப்பியன் மொழிநூல்

பார்ப்பனர் தமிழ்ப்பற்றின்மை, தனித்தமிழை விரும்பாததி னாலும், யூனிவர்சிட்டி, ஸ்கூல் பைனல் என்று ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்க்காது வழங்குவதினாலும் அறியப்படும்.

(5) உறையுள் : பார்ப்பனர் எங்கிருந்தாலும் தமிழரொடு கலவாது தனித்தே உறைகின்றனர். அக்கிரகாரத்தில் இடம் அல்லது வச தியில்லாதபொழுதே தமிழர் நடுவில் வந்து குடியிருப்பர். ங்ஙனமிருப்பவரும் பெரும்பாலும் ஆங்கிலம் கற்றவராயும் அலுவலாளராயுமே யிருப்பர். அக்கிரகாரத்தில் எக்காரணத்தை யிட்டும் தமிழருக்குக் குடியிருக்க இடந்தருவதில்லை. பலவிடங்களிற் சுடுகாடுகூடப் பார்ப்பனருக்குத் தனியாக வுளது.

(6) ஒழுக்கம்: பார்ப்பனர் தமிழ முறைப்படி, விருந்தோம்பல், நடுவுநிலைமை முதலிய அறங்கள் இன்மையால் இல்லறத்தாருமல்லர்; கொல்லாமை, துறவு முதலிய அறங்களின் மையில் துறவறத்தாருமல்லர்.

"இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு."

(குறள். 81)

ஒருவர் தம் குலத்தாருக்கு மட்டும் விருந்து செய்வது விருந்தோம்பலாகாது.

வேள்வியில் உயிரைக் கொல்வதும் கொலையே.

எல்லார்க்கும் பொதுவான அறச்சாலைகளிற்கூடப் பார்ப்பனர் உண்டபிறகே தமிழர் உண்ணவேண்டு மென்ற ஏற்பாடு இன்றும் இருந்துவருகின்றது. இது மிகவுந் திருந்திய திருப்பனந்தாள் மடத்திலும் இருந்துவருவது தமிழர்க்கு மிகவும் நாணுத்தருவதாகும்.

பார்ப்பனர் தமிழரொடு மணவுறவு கொள்ளாமை

பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்ததிலிருந்து தமிழரொடு மணவுறவு கொண்டதில்லை. முதன் முதலாகத் தமிழ்நாட்டிற்கு வந்த சில ஆரியர் அரக்க மாதரையோ தமிழ மாதரையோ மணந்து பின்பு கைவிட்டதாகத் தெரிகின்றது. காசியபர் மாயையை மணந்ததைக் கந்த புராணத்திலும், விசிரவசு கேகசியை மணந்ததை இராமாயணத்திலும் காண்க. இராமனுஜர் சில தமிழரைப் பார்ப்பனராக்கினரென்று