உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

கல் (கருமைக் கருத்துவேர்)

அடிக்கருத்து (கருமை)

குல் - குலவு. குலவுதல் = கூடுதல், கலத்தல். கலத்தற் கருத்தினின்று மயக்கக் கருத்தும், மயக்கக் கருத்தினின்று இருண்மைக் கருத்தும், இருண்மைக் கருத்தினின்று கருமைக் கருத்துந் தோன்றும்.

கல் + து = கஃறு- கருமைக் குறிப்புச் சொல்.

"கஃறென்னுங் கல்லத ரத்தம்” (தொல். எழுத்து. 40, உரை) கல்- கன்- கன்னல் = கரிய வகையான கரும்பு (திவா.) கன்னங்கரிய, கன்னங்கறேல் (கன்னங்கரேர்) என்னும் வழக்குகளை

நோக்குக.

கல் - கால் = கருநிறம்.

"கால்நோய் மேனிக் கண்டகர்” (கம்பரா. உயுத். வானர. 21)

கல் - கள்- கள்வு - கள்வன் = 1. கரிய யானை (பிங்.); 2. கரியவன் (பிங்.). 3. கருநண்டு. “புள்ளிக் கள்வன்” (ஐங். 21). 4. நண்டு வடிவான (கடக) ஓரை.

கள்வன் - களவன் = கருநண்டு.

“புள்ளிக் களவன்”

(கலித்.88:10)

கள் - கள (நன். 165, மயிலை.)- களா (திவா.)- களவு (ம.களவு. க.களவெ.)-களவம் = கரிய கனிவகை, அதையுடைய செடி. கள- களம்.

swan).

“காக்கையிற் கரிது களம்பழம்" (தொல். சொல். 79, உரை)

களவம் - களகம் = கரிய பெருச்சாளி (திவா.), காரோதிமம் (black

=