உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்பு

'அல்' (கருமைக் கருத்துவேர்)

அல்லுதல் = பொருந்துதல், கலத்தல், மயங்குதல்

அல்லுதல் = 1. முடைதல், குருவி கூட்டை அல்லுகிறது என்பது உலக வழக்கு. “ஒரு கூண்டை அல்லுகிறவன் ஒன்பது கூண்டை அல்லுவான்” என்பது பழமொழி.

2. பின்னுதல். மரங்கள் ஒன்றோடொன்று பின்னிக் கொள்ளுதலை, அல்லிக் கொண்டன என்பர்.

அல் = மயக்கம் (ஒழிவிலொடுக்கம். பொது. கவி. 6)

அல் - அலவு = மனத்தடுமாற்றம்.

"ஆதுல மாக்களும் அலவுற்று” (மணிமேகலை 4 : 42)

கலத்தற் கருத்தில் மயக்கக் கருத்தும், மயக்கக்கருத்தில் கருமை

அல்லது இருட்கருத்தும் தோன்றும்.

"அல்லார்ந்த மேனியொடு.

அந்தகா"

(தாயுமானவர் பாடல்)

ஒ.நோ: முயங்கு மயங்கு - மயக்கம்.

முயல் – மயல் -

மயல் - மால்

-

மயக்கம், கருமை.

கள்ளுதல் = பொருந்துதல், கலத்தல். கள் கர் கரு கருமை.

கள் காள்

=

கரியவள்.

காளி காளம் = கருமை. காள்

காள் காழ் = கருமை.

அல் = 1. பகலும் இரவும் கலக்கும் அந்திவேளை (மதுரைக்காஞ்சி, 544) 2. இருள் (பிங்.) 3. இரா (பிங்.) M.al.

ஒ.நோ: மால்

மாலை.

அல் -அல்லி -இரவில் மலரும் ஆம்பல், கரியமலருள்ள காயா. K.alamar, Tu. alimar.