உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்பு 'அல்' (கருமைக் கருத்துவேர்)

எல்லிருள் = இராவிருள்.

எல் - எல்லி = 1. இரவு. "எல்லியிது காலையிது” (சீவக. 1877)

2. இருள். "நீரரை யெல்லியியங்கன்மினே”

(இறை. 20, எடுத்துக்காட்டுச் செய்யுள் 217)

எல்லிநாயகன் = திங்கள். எல்லிப்பகை = கதிரவன்.

எல் என் - ஏன் = கரியவிலங்கான பன்றி.

"ஏனொருவனா யெயிற்றில் தாங்கியதும்” (திவ். இயற். நான். 70)

ஏன் - ஏனம் = பன்றி

"இருள்நிறப் பன்றியை ஏனம் என்றலும்” (தொல். பொ. 623) ஏன் - ஏனல் = கருந்தினை (சூடா).

ஏன் ஏனை யானை ஆனை.

159

இன்றும் யானையை ஏனை என்னும் வழக்கு நெல்லை நாட்டில்

உள்ளது.

T. enuga, M.ana, K., Tu. ane.

இரு

ரு எரு எருமை = கரியமாடு. "குவிமுலை படர்மருப் பெருமை” (சீவக. 2102).

M. eruma, Tu. erme, T.enumu, K. emme. S. heramba.

எருமை மறம் = மறவனொருவன் தன் படை முதுகிடவும் பகைவர் படையைத்தான் அஞ்சாது எதிர்த்து நிற்கும் புறத்துறை (பு.வெ. 7, 13) “ஒருவ னொருவனை யுடைபடை புக்குக்

கூழை தாங்கிய எருமையும்” (தொல். பொ. 72)