உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

கைவரி நூல் (Palmistry) ஒரு தனி நூலாய் வழங்கி வரினும், அது உடற்குறி நூலின் ஒரு பிரிவே.

இளங்கோவடிகளின் உடற்கூற்றைக் கண்டு அவருக்கு அரசாளும் திருப்பொறி யுண்டென்று குறிகாரன் கூறியது, உடற்குறி நூல் தழுவியே.

66

நுந்தை தாள்நிழல் இருந்தோய் நின்னை

அரைசுவீற் றிருக்கும் திருப்பொறி யுண்டென்று

உரைசெய் தவன்"

(சிலப்.30:174-6)

என்று இளங்கோவடிகள் பத்தினித் தெய்வக் கூற்றாய்க் கூறுதல் காண்க.

.நேமியொடு

வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை”

(முல்லை.2-3)

என்பது கைவரியையும்,

"எழுமரங் கடுக்கம் தாள்தோய் தடக்கை"

(புறம்.90-10)

என்பது கைவடிவளவையும்,

"செவ்வரி யொழுகிய செழுங்கடை மழைக்கண்"

(சிலப்.11:184)

என்பது கண்ணிறத்தையும் குறிக்கும் உடற்குறி நூற் சான்று களாம். (13)புள் நூல்

வல்லூறு, ஆந்தை, காகம், கரிக்குருவி, காடை முதலிய பறவை களின் குரலையும் இயக்கத்தையும் கொண்டு, வரப்போகும் நன்ன தீமைகளைக் கணித்துக் கூறுவது புள் நூல்.

புள் பறவை. புள்ளால் அறியப்படும் குறியைப் புள் என்பது ஆகுபெயர். வழிச்செல்வார் வாயினின்று தற்செயலாய் வரும் சொல்லைக் குறியாகக் கொள்வது, வாய்ப்புள் எனப்படும்.

உடம்பின் பலவுறுப்புக்கள் துடிப்பதைக் கூறும் துடிநூலும், கட்டு என்னும் நெற்குறியும், கழங்கு என்னும் காய்க்குறியும், ஏதேனும் ஓர் ஏட்டைத் தொடும் தொடுகுறியும், எண்குறியும், பெயர்க்குறியும், நின்ற நிலைக் குறியும் கவடிக்குறியும், கண்ட காட்சிக் குறியும் நேர்ந்த நிகழ்ச்சிக் குறியும், சொன்ன சொற் குறியும், கோடிழைத்தற்குறியும், மூச்சு விடற்குறியும். தேவராளர் குறியும், விரிச்சிக்குறியும், (Oracle) இரண்டிலொன்றன் குறியும், பல்வேறு நிகழ்ச்சிகளான நற்குறி தீக்குறிகளும் பிறவும் புள்நூலின்பாற்படுவனவே.