பண்டைத் தமிழ் நாகரிகம்
(25) திணை நூல்
155
முதல் கருஉரி என்னும் மூவகைப் பொருளையும் பற்றிக் கூறும் திணை நூல், ஒரு வகையில் ஞாலநூலை (Geography) ஒக்கும்.
(26) பொழுது போக்கு
பண்டைத் தமிழ் மக்கள் ஒழிவு நேரத்தையும் ஓய்வு நாட்களையும் பின்வருமாறு கழித்து வந்தனர்.
சிறுவர்:
கோலியடித்தல், தெல் தெறித்தல், கிளித்தட்டு, சடுகுடு, கில்லித் தாண்டு, பாண்டி (சில்லாக்கு), முதலிய விளையாட்டாடல், காற்றாடி விடுதல், மரமேறுதல், நீருள் மூழ்கி விளையாடல் முதலியன. இளைஞர்:
சடுகுடு, கிளித்தட்டு முதலிய விளையாட்டாடல், மற்பயிற்சி இளவட்டக்கல் தூக்கல், கரியலடித்தல், வேட்டையாடல், ஏறுகோள் (சல்லிக்கட்டு) முதலியன.
முதியோர்.
சேவற்போர், கடாப்போர், கதுவாலிப்போர், காடைப்போர், புறாப்போட்டி முதலியன காணல், வேட்டையாடல்,தூண்டில் போடுதல், பணையம் வைத்தும் வையாதும் தாயமாடுதல் முதலியன.
சிறுமியர்:
வீடுகட்டி விளையாடல், கும்மியடித்தல், பூப்பறித்தல், கழங் காடல், தெள்ளேணம் கொட்டல், அம்மானையாடல் முதலியன. பெண்டிர்:
கிளி வளர்த்தல், பூவை (நாகணம்) வளர்த்தல், புறா வளர்த்தல், மான் வளர்த்தல், மாலை தொடுத்தல், தாயமாடுதல், குரவை யாடல் முதலியன.
அரசர்:
குதிரைப் பந்தயம், தேர்ப்பந்தயம், யானைப்போர், சாக்கைக் கூத்து முதலியன காணல்; யாழ்ப்போர், இசைப்போர், ஆடற்போர், செய்யுட் போட்டி, பட்டிமன்றம், பல்கவன அரங்கு, நூலரங்கேற்றம் முதலிய நடப்பித்தல்; வேட்டையாடல், பனையம் வைத்துத் தாயமாடல், உரிமைச் சுற்றத்துடன் இலவந்திகைச் சோலையில் விளையாடல் முதலியன.