உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அரசிய லுறுப்புகள்

5

முத்தமிழ் நாடுகளுள் அடங்கிய உள்நாடுகளை வெவ்வேறு சிற்றரசரும் துணையரையரும் (Viceroys) ஆண்டு வந்தனர். தலைமை யரசர் வலிகுன்றியபோது, அதிகாரவாசைமிக்க சிற்றரசரும் துணை யரையரும் தனியரசராகிவிடுவது வழக்கம். இவ்வகையில், சேரநாட் டினின்று கொங்குநாடும், சோழநாட்டினின்று தொண்டை நாடும் பிரிந்துபோயின. பிற்காலத்துப் பேரரசர் தம் பெருவலியால் அவற்றை மீள அடிப்படுத்தினும், அவை வெல்லப்பட்ட புறநாடுகள் போற் கருதப்பட்டனவேயொழிய, பண்டுபோல் சேர சோழ நாட்டுப் பகுதியான உள்நாடாகக் கருதப்பெறவில்லை. ஆயினும் தமிழ கத்தை 'வண்புகழ் மூவர் தண்பொழில்' என்று கூறும் என்று கூறும் இலக்கிய மரபு நெடுகலும் இருந்து வந்தது.

பாண்டிநாட்டின் பெரும்பகுதியைச் சிறிதும் பெரிதுமாய்ப் பன்முறையிற் கடல்கொண்டுவிட்டதனாலும், சேர சோழ நாடு களின் எல்லைப்புறத்துச் சிற்றரசர் அடிக்கடி தனியரசராகிக் கொண்டும் தம் நாட்டை விரிவுபடுத்திக் கொண்டும் இருந்ததினா லும், தமிழகத்தின் வடகோடியும் வடமேற்குப் பகுதியும் மொழி பெயர் தேயமாகத் திரிந்து வந்ததினாலும், கடைச்சங்க காலத்திற்குப் பின் முத்தமிழ் நாடுகளும் மிக ஒடுங்கிவிட்டன.

சேரநாட்டின் வடபாகத்தைச் சேர்ந்த கருநாடும் கங்கமும் கட்டியமும், 9ஆம் நூற்றாண்டிலேயே முழுக் கன்னட நாடாகி, 11ஆம் நூற்றாண்டில் ஹொய்சள ஆட்சிக்குட்பட்டு விட்டன. 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்த விஷ்ணுவர்த்தனன் என்னும் ஹாய்சள மன்னன், கேரள (சேரல) நீலமலையைக் (Nilgiris) கைப்பற்றிக்கொண்டதாக அவன் கல் வெட்டுக் கூறுவதால், சேரநாட்டின் வடவெல்லை 12 ஆம் நூற்றாண் டில் மிகத் தெற்கே தள்ளி விட்டதென அறியலாம்.

அரசனை

வென்று

கொங்குநாடு. மூவேந்தரும் முட்டிப் பொருங் களமாயிருந்து, ஒரு நிலையிலில்லாமல், அடிக்கடி அம் மூவருள்ளும் ஒருவர் கையினின்று ஒருவர் கைக்குக் கடந்து கொண்டும் எல்லைமாறிக் கொண்டும் இருந்ததினால், ஒரு தனி நாட்டிற்குரிய தன்மையை முற்றும் இழந்து விட்டது. அதனால், 3-ஆம் குலோத்துங்கச் சோழன் (1178-1218) அவைக்களப் புலவராயிருந்த கம்பர், சேர சோழ பாண்டி தொண்டை நாடுகளின் எல்லைகளை மட்டும் பின்வருமாறு பாடியுள்ளார்:

"வெள்ளா றதுவடக்கா மேற்குப் பெருவழியாம்

தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார ஆண்ட கடல்கிழக்கா மைம்பத் தறுகாதம்

பாண்டிநாட் டெல்லைப் பதி.

""