உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

பழந்தமிழாட்சி பட்டபின், உடனிருப்போருள் ஒருவன், முன்னேற்பாட்டின்படி, "இவ்வரசன் நம்மைக் கொல்லத் துணிந்தான். நாம் முற்பட இவனைக் கொன்றுவிட்டு நமக்கினிய ஒருவனை அரசனாக்கு வோம். உன் கருத்து யாது?” என்று தானே வினவுவதுபோல் வினவி, அவன் கருத்தைச் சூளுறவோடு சொல்வித்தல்.

இவ்வகை நோட்டத்தையே,

"அறம்பொரு ளின்ப முயிரச்ச நான்கின் திறந்தெரிந்து தேறப் படும்"

என்னுங் குறளால் தெரிவித்தார் திருவள்ளுவர்.

(501)

சில பதவிகட்குச் சில குடியினர் சிறப்பாகத் தெரிந்து கொள்ளப்பட்டனர். அமைச்சர் பதவிக்கு வேளாளர் அல்லது வேளிரே தகுந்த வராகக் கருதப்பட்டார். 'அறமும் மதமும்பற்றிய வினைகட்கெல்லாம் பெரும்பாலும் பார்ப்பனரே அமர்த்தப் பட்டனர் என்பது, அறக்களத் தந்தணர் தருமாசனபட்டர் எனவருந் தொடர்களால் அறியலாகும். தூதிற்குப் புலவரும் பார்ப்பனரும் ஆளப்பெற்றனர்.

ஊர்ச்சபைத் தேர்தல்: ஒவ்வோர் ஆள்நிலவூரிலும் ஆண்டு தோறும் ஆளுங்கணத் தேர்தல் நடைபெற்றது. ஓர் ஆளுங்கணத்தின் ஊழிய ஆண்டு முடிவுறுஞ் சமையத்தில், அதனைக் கண் காணிக்கும் நாட்டதிகாரிக்காவது ஊரதிகாரிக்காவது, அரசனால் மதிக்கப்பட்ட ஒரு பெருமகனுக்காவது, ஊர்ச்சபைத் தேர்தலை நடத்தி வைக்கும்படி, அரசனிடத்திருந்து தேர்தல் விதிகளடங்கிய ஆணை வரும்.

ஆணைபெற்ற அதிகாரி உடனே அதை ஊர்ச்சபையார்க்குக் காட்டுவன். அவர் அதைத் தலைமேற் கொண்டு கண்ணிலொற்றி அதன்படி செய்யத் தொடங்குவர்.

ஒவ்வோர் ஊரும் தேர்தல் வினைப்பொருட்டுப் பல குடும்பு களாகப் (Wards) பகுக்கப்பட்டிருக்கும். செங்கற்பட்டு மாவட்டத் தைச் சேர்ந்த உத்தரமேருர்(உத்தரமேலூர்) முப்பது குடும்புகளையும், தஞ்சை மாவட்டத்தில் இன்று செந்தலை என வழங்கும் சந்திர லேகைச் சதுர்வேதிமங்கலம் அறுபது குடும்புகளையும், கொண்டி ருந்தன.

'நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம் கோலெனிலோ ஆங்கே குடிசாயும் - நாலாவான்

மந்திரியு மாவான் வழிக்குத் துணையாவான்

அந்த வரசே யரசு

"2

என்பது ஒளவையார் கூற்று.